நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 18 டிசம்பர், 2012

விடுதலை நாளிதழில் குவைத் கண்காட்சி பற்றிய செய்தி…



 விடுதலை(17.12.2012)


குவைத்தில் நடைபெற்ற தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி உலக அளவில் பலருக்கும் முன்மாதிரியான கண்காட்சியாக அமைந்தது. அமெரிக்கா, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து கண்காட்சிப்பொருட்கள் தேவை என்று தமிழார்வலர்கள் பலர் உடனடியாக கண்காட்சி அமைப்பாளர்களுக்கு மின்னஞ்சல் செய்திருந்தனர். 

மேலும் பல நாடுகளிலிருந்து இந்தக் கண்காட்சி குறித்த செய்திகள் பல மாதங்களாக இணைய இதழ்களிலும் அச்சு இதழ்களிலும் வெளிவந்த வண்ணம் இருந்தன. குவைத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி பற்றி விடுதலை நாளிதழில் முதல் பக்கத்தில்(17.12.2012) படத்துடன் செய்தி வெளியானது. செய்தியை வெளியிட்டு உதவிய விடுதலை ஆசிரியர் திரு. கி. வீரமணி ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.




கருத்துகள் இல்லை: