நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே தொடங்கியது….




குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று காலை பத்து மணிக்கு இனிதே தொடங்கியது. நிகழ்ச்சிக்குக் குமாரராணி முனைவர் மீனா முத்தையா அவர்கள் தலைமை தாங்கினார். பேராசிரியர் மறைமலை இலக்குவனார், முனைவர் ஒப்பிலா மதிவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் மு.இளங்கோவன், முனைவர் கிருட்டிணமூர்த்தி ஆகியோர் பயிற்சி வழங்கினர். சென்னையைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.

5 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தங்கள் அயராத தமிழ்ப்பணிக்கு வாழ்த்துக்கள் முனைவரே..

தொடர வாழ்த்துக்கள்.

Chitra சொன்னது…

i am really happy to hear that arts & science college is opened.well done. Nowadays we saw too many engineering colleges were opened.

balu manjai ngp சொன்னது…

வாழ்த்துகள் நண்பரேதமிழ் இணைய பயிலரங்கு வெற்றி பெற வாழ்த்துகள்

Unknown சொன்னது…

இன்று நடந்த தமிழ் இணைய பயிலரங்கில் அறிந்து கொண்ட விசைப்பலகை இயக்க
முறையை உபயோகித்து நான் இந்த இடுகையை பதிவு செய்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல்களை தந்த முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு நன்றி-திருமதி.பா.ஹேமா, உதவிப்பேராசிரியர்,வணிக நிறுமன செயலரியியல் துறை,குமார ராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை.

Unknown சொன்னது…

இன்று நடந்த தமிழ் இணைய பயிலரங்கில் அறிந்து கொண்ட விசைப்பலகை இயக்க
முறையை உபயோகித்து நான் இந்த இடுகையை பதிவு செய்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல்களை தந்த முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு நன்றி-திருமதி.பா.ஹேமா, உதவிப்பேராசிரியர்,வணிக நிறுமன செயலரியியல் துறை,குமார ராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை.