
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரியில் இன்று(20.01.2011) காலை பத்து மணிக்கு முத்தமிழ் மன்ற விழா நடைபெறுகின்றது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா. பொன்னுத்தாய் அவர்கள் வரவேற்புரையாற்றவும், கல்லூரி முதல்வர் முனைவர் து.சாந்தி அவர்கள் தலைமையுரையாற்றவும் உள்ளனர்.
சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இரத்தின. வேங்கடேசன் அவர்கள் "சிங்கப்பூரில் தமிழும் தமிழரும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.
இரண்டாவது அமர்வு பகல் பன்னிரண்டு மணிக்குத் தொடங்குகிறது.இதில் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் மாணவர்களுக்குக் காட்சி வழியாக இணையத்தையும் அதன் பயன்பாடுகளையும் விளக்க உள்ளார். கல்லூரியின் தமிழ்த்துறை மாணவிகள் முந்நூறுபேர் இந்த அமர்வில் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக