நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 22 செப்டம்பர், 2010

சென்னையிலிருந்து முதன்மொழி…


முதன்மொழி

பாவாணர் உருவாக்கிய உலகத்தமிழ்க்கழகம் அமைப்பைப் புதிய வளர்ச்சியுடன் பாவாணர் பற்றாளர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்த அமைப்பின் கொள்கை விளக்க ஏடாக முதன்மொழி இதழ் சென்னையிலிருந்து வெளிவருகிறது. இதுவரை எட்டு இதழ்கள் வெளிவந்துள்ளன.

முதன்மொழி இதழின் நெறியாளர்களாக முதுமுனைவர் இரா.இளங்குமரனார்,பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, பேராசிரியர் கு.பூங்காவனம் உள்ளனர்.ஆசிரியர் குழுவில் முனைவர் ந.அரணமுறுவல்,பாவலர் கதிர்.முத்தையன், பாவலர் தா.அன்புவாணன் வெற்றிச்செல்வி. திரு.கி.வெற்றிச்செல்வன், புலவர் ஆ.நெடுஞ்சேரலாதன் உள்ளனர்.

இந்த மாத இதழில் (சூன்-ஆகத்து-2010)செம்மொழி மாநாட்டுத் தீர்மானங்கள், சிந்து எழுத்துச் சிக்கலுக்குத் தீர்வு,இந்திய நாகரிகத்திற்கு அடிப்படை தமிழே!,மாந்தருள் பன்றிகள், சீனத்துக்குச் சென்ற சித்த மருத்துவம், எழுத்துச்சீர்திருத்தம் எதற்கு?, நிறைமலையாம் மறைமலை, முசிறியைக் கண்டுபிடித்தல்(இது தமிழர்களுக்குப் பயன்படக்கூடிய மிகச்சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு), நாமம், NAME வரலாறு, தமிழை ஒரு பாடமாக ஏன் படிக்க வேண்டும், திருவள்ளுவரும் சர்வக்ஞரும், திராவிடத்தைத் தமிழியமாக மாற்றுவதற்கு, உலகத் தமிழ்க்கழகத்துடன் இணைந்தது தமிழ் ஒளி இயக்கம், தமிழ் படிப்போரே! தமிழ் வழியில் படிப்போரே! என்னும் தலைப்புகளில் அமைந்த படைப்புகள் உள்ளன.

தமிழுக்கு ஆக்கமான செய்திகளைக் கொண்டு 52 பக்கத்தில் வெளிவரும் இதழைத் தமிழ்ப்பற்றாளர்கள், நூலகங்கள் வாங்கி உதவலாம்.

தனி இதழ் 10.00 உருவா
ஆண்டுக்கட்டணம் 100.00
வாணாள் கட்டணம்: 1000.00
புரவலர் கட்டணம்: 3000.00

தொடர்புக்கு:

முதன்மொழி
726,பாவாணர்தெரு,
முல்லைநகர்,மேற்குத் தாம்பரம்,
சென்னை- 600 045
செல்பேசி + 91 9444203349

1 கருத்து:

பகுத்தறிவு சொன்னது…

ஐயா,
முதன்மொழி பற்றி இணையத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமை தங்களுடையது! தற்போது முதன்மொழி இதழை அயலகத் தமிழர்களும் படிக்க ஏதுவாகக் கீற்று (www.keetru.com) இணையத்தளத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். படித்து மகிழுங்கள்!