நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 13 மார்ச், 2010

மயிலம் சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை,அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் பயிலரங்கு

மயிலம் சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை,அறிவியல் கல்லூரியில்
தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் பயிலரங்கு இன்று(13.03.2010) காலை பத்து மணி முதல் 1.30 மணி வரை நடைபெற்றது.பேராசிரியர் மா.சற்குணம் அவர்கள்(முதல்வர்)தலைமையேற்றார்.புதுச்சேரியிலிருந்து நான் காலை உந்து வண்டியில் புறப்பட்டு பேராசிரியர் எழில்வசந்தன் அவர்களுடன் அரங்கம் அடைந்தேன்.பேராசிரியர்களும் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,நூலகங்கள் , விக்கிப்பீடியா உள்ளிட்ட இணையப் பயன்பாடுகளை அறிந்தனர்.வலைப்பூ உருவாக்கம் பற்றியும் செயல் விளக்கம் வழியாக விளக்கினேன்.உத்தமம் போன்ற தமிழ் இணையம் சார்ந்த அமைப்பையும் அரங்கினருக்கு அறிமுகம் செய்தேன்.150 மாணவர்களும் பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டமை மகிழ்ச்சி தந்தது.

கருத்துகள் இல்லை: