நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 15 பிப்ரவரி, 2008

பன்னாட்டுக் கருத்தரங்கம், இக்காலத் தமிழ்க்கவிதைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் இக்காலத் தமிழ்க்கவிதைகள் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2008 பிப்ரவரி 15,16 நாள்களில்(வெள்ளி,சனி)நடைபெறுகிறது. சென்னைக்கலைஞன் பதிப்பகத்துடன் இணைந்து இக்கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.

15.02.2008 முற்பகல் 10.15 மணிக்கு நடைபெறும் தொடக்கவிழாவில் முனைவர் துரை.பட்டாபிராமன் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் மா. இராமநாதன் அவர்கள் கருத்தரங்க ஆய்வுக்கோவைகளை வெளியிடுகின்றார். கலைஞன் பதிப்பக உரிமையாளர் மாசிலாமணி அவர்கள் முதற்படிகளைப் பெற்றுக் கொள்கின்றார். சிறப்பு விருந்தினராகப் பாவலர் அப்துல் இரகுமான் அவர்கள் கலந்துகொண்டு முதன்மையுரை ஆற்றுகின்றார்.அதனைத் தொடர்ந்து கருத்தரங்க அமர்வுகள் இரண்டுநாளும் நடைபெறும்.

16.02.2008 சனிக்கிழமை பிற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் முனைவர் அரங்க பாரி அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். தமிழியல் துறைத்தலைவர் முனைவர் துரை.பட்டாபிராமன் அவர்கள் தலைமையுரை ஆற்றுவார். ஆய்வுரையாகத் திரைப்பா ஆசிரியர் பாவலர் அறிவுமதி அவர்கள் உரையாற்றுகிறார்.

கட்டுரையாளர்களுக்குச் சான்றிதழ்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் மா.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கி வாழ்த்துரைப்பார். பல நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆய்வாளர்கள் கட்டுரைகளை வழங்க உள்ளனர்.

தொடர்பிற்கு :

முனைவர் அரங்க.பாரி அவர்கள்
இணைப்பேராசிரியர்
தமிழியல்துறை,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர் - 608 002
செல்பேசி : 9842281957

செவ்வாய், 12 பிப்ரவரி, 2008

தமிழ்ப்பணியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம்...

பாரதிதாசன் பல்கலைக்கழத்தின் மாண்பமை துணைவேந்தராக முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் பணியேற்றது முதல் பல்வேறு தமிழ்ப் பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார். தமிழ்வழிப் பொறியியல் படிப்பு, தமிழ்வழித் தொடக்கக்கல்வி, தமிழ் இணைய வளர்ச்சிப் பணிகள் (யுனிகோடில் தமிழ் எழுத்துக்குரிய இடம்) என்று இவரின் பணிகள் நீண்டவண்ணம் உள்ளன. முன்பே தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் வழி இவர் செய்த தமிழ்ப்பணியைத் தமிழுலகம் நன்கறியும்.

தமிழகத்தில் பல்கலைக்கழகப் பட்டம் பெறுபவர்கள் தமிழ் தெரியாமலே பட்டம் பெற்றுச் சென்றுவிடுகின்றனர். இக்குறையைப் போக்க இதுவரை சரியான திட்டம் முன்வைக்கப்படாமல் இருந்தது. முனைவர் பொன்னவைக்கோ உள்ளிட்ட அறிஞர் குழுவினர் அண்மையில் இதுபற்றி ஆராய்ந்து அரசுக்கு ஒரு திட்டம் வைத்துள்ளனர். இனித் தமிழகப் பல்கலைக் கழகத்தில் பகுதி 1 தமிழ் என்றும் பகுதி 2 ஆங்கிலம் என்றும் கற்றுத்தரப்படும். பிற மொழியினர் தங்கள் தாய்மொழி கற்கவும் வழி உண்டு.

பகுதி 1 தமிழ் என்பதில் தமிழ் முன்பு (தொடக்க, உயர், மேல்நிலைகளில்) கற்றவர்கள் உயர்தரப் பாடங்களையும், தமிழ் இதுவரை அறியாத பிற மொழியினர் தமிழ் நெடுங்கணக்கு உள்ளிட்ட அறிமுகப் பகுதிகளைக் கற்பர். இனித் தமிழ் நாட்டில் தமிழ் அறியாமல் யாரும் பட்டம் பெறமுடியாது. உருசியாவில், சப்பானில் அந்நாட்டினரின் மொழியை அறியாமல் யாரும் பட்டம் பெற முடியாது. அந்த நிலையை உருவாக்கித் தமிழகத்தில் மிகப்பெரிய தமிழ்ப்பணி செய்யும் முனைவர் பொன்னவைக்கோ அவர்களைத் தமிழர்கள் அனைவரும் போற்றவும், வணங்கவும் வேண்டும். இதுதானே பாவாணர் கண்ட கனவு. இதற்குத்தானே பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர்கள் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்தனர்.

இது தொடர்பிலான தினமணியின் இன்றைய(12.02.2008) செய்தி கீழே வழங்கியுள்ளேன்.

பட்டப்படிப்பில் தமிழ் கட்டாயப் பாடம்

விழுப்புரம், பிப். 11: பல்க லைக் கழகங்களில் பட்டப்ப டிப்பு படிக்கும்போது, தமிழைக் கட்டாயப் பாடமாக படிக்க வேண்டும் என்று தமிழக அரசு அமைத்துள்ள கல்விக் குழு அர சுக்கு பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந் தர் பொன்னவைக்கோ வானூர் செங்கமேட்டில் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியது: பல்கலைக் கழகங்களின் கல் விமுறை குறித்து ஆராய தமிழக அரசு குழு (சிபிசிஎஸ்) அமைத் தது. இது குறித்து ஆராய்ந்து நாங்கள் அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம். அந்த அறிக் கையின்படி தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் பட்டம் பெறுவதற்கு கட்டாயமாகத் தமிழை ஒரு பாடமாக படிக்க வேண்டும். தமிழ் தெரியாத ஆங் கில வழி படித்தவர்கள், மற்ற மாநில மொழி பேசுபவர்கள், அடிப்படைத் தமிழைப் பட்டப் படிப்பில் பகுதி-1ல் பயில வேண் டும். மற்ற மாநில மாணவர்கள் பகுதி 4-ல் தேர்வு செய்து அவர் கள் தாய்மொழியை சேர்த்து கற் கவும் பரிந்துரையில் கூறியுள் ளோம். இதனை அரசாணை யாக வெளியிட்டு அனைத்து பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பும்படி நாங்கள் பரிந் துரை செய்துள்ளோம்.

மென்பொருளில் கூடுதல் இடம்: மென்பொருள்களில் இடம் ஒதுக்குவது குறித்து யூனி கோட் கன்சார்டியம் என்ற அமைப்பானது ஆராய்ந்து வரு கிறது. ஏற்கெனவே 8 பிட் குறி யீட்டு முறையில் 256 இடங்கள் இருந்தன.

அதில் 128 இடங்கள் ஆங்கி லத்துக்கு ஒதுக்கப்பட்டன. மீத முள்ள 128 இடங்கள் மற்ற மொழிகளுக்கு ஒதுக்கப்பட் டன. இதில் தமிழில் உள்ள 247 எழுத்துகளுக்கு 30 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.இது போதுமானதாக இல்லை.

இந் நிலையில் கணினியில், உலகில் உள்ள அனைத்து மொழிகளும் பயன்படுத்தப்படு வதற்கு வசதியாக 16 பிட் குறி யீட்டு முறை உருவாக்கப்பட் டது. இதில் மொத்தம் 64,536 இடங்கள் இருந்தன. அப்போது கேட்டிருந்தால் எவ்வளவு இடம் வேண்டுமானாலும் தமி ழுக்கு கிடைத்திருக்கும்.

ஆனால் சரியான நடைமுறை யைப் பின்பற்றி கேட்காததால் 128 இடங்கள் மட்டுமே பெறப் பட்டன. தமிழ் எழுத்துகள், தமி ழில் பயன்படுத்தப்படும் வட மொழி எழுத்துகள் அனைத்துக் கும் சேர்த்து தமிழுக்கு 357 இடங்கள் தேவைப்படுகிறது.

இது குறித்து பன்னாட்டு கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள் ளோம். ஏற்கெனவே பல்வேறு மொழிகளுக்கு ஒதுக்கப்பட் டது போக மீதம் 484 இடங்கள் மட்டுமே தற்போது உள்ளன.

இதனால் உடனடியாகப் பெற முடியவில்லை. இது தொடர்பாக பன்னாட்டு குழுவினர் தமி ழகம் வந்து விவாதித்துவிட்டுச் சென்றுள்ளனர். விரைவில் 357 இடங்கள் கிடைத்துவிடும் என்று நம்புகிறோம். அப்படி கிடைத்தால் ஒரே பட்டனை பயன்படுத்தி தமிழ் எழுத்துக ளையும், துணை எழுத்துகளை யும் தட்டச்சு செய்ய முடியும் என்றார் பொன்னவைக்கோ.

நன்றி : தினமணி (12.02.2008)