நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 பிப்ரவரி, 2010

புதுச்சேரியில் இலங்கைத் தமிழ் ஆசிரியர்களுக்கு வரவேற்பு

புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள இலங்கைத் தமிழாசிரியர்களுக்கு இன்று(17.02.2010)காலை 11.00 மணிக்கு,புதுச்சேரித் தமிழ்ச்சங்க அரங்கில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் கற்றல்,கற்பித்தல் நிகழ்வுகளைப் பார்வையிட வரும் இவர்கள் புதுச்சேரியில் பள்ளிகளின் செயல்பாடுகளையும் நேரில் கண்டு தெரிந்துகொள்ள உள்ளனர்.

இவ்வாறு கல்விச்செலவாக வரும் தமிழாசிரியர்களைப் புதுச்சேரியில் வரவேற்று வாழ்த்துரைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகியுள்ளது.

முனைவர்மு.முத்து(தலைவர்,பாவேந்தர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்) அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் புதுச்சேரி அரசின் மேனாள் கல்வி அமைச்சர் க.இலட்சுமிநாராயணன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க உள்ளார்.கடலூர்த் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார் அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளார்.ஈகி திரு.அப்துல் மசீது அவர்கள் நன்றியுரை வழங்க உள்ளார்.இலங்கைத் தமிழாசிரியர்களை நான் வரவேற்று, உரையாற்றுகிறேன்.