நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 12 மே, 2015

கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா



கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா 16.05.2015 காரி(சனி)க் கிழமை மாலை 6.05 மணிக்கு நடைபெற உள்ளது. சிறப்பு நிகழ்வாகப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது.

தோழர்  அரங்க. இரகு அவர்கள் வரவேற்புரையாற்றவும், கல்விச்செம்மல் முனைவர் வெ. முத்து அவர்கள் தலைமை தாங்கவும் பேராசிரியர் இராச. குழந்தைவேலனார் அவர்கள் அறிமுகவுரையாற்றவும் உள்ளனர்.

  கவிஞர் செல்ல. கந்தசாமி அவர்களின் முன்னிலையில் நடைபெறும் நிகழ்வில் முனைவர் மு.இளங்கோவன் ஏற்புரையாற்ற உள்ளார். புலவர் மு.நாகப்பன் அவர்கள் நன்றியுரை வழங்க உள்ளார்.

விழாவுக்கான ஏற்பாடுகளைக் கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் செய்துள்ளனர். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கவும்!

தொடர்புக்கு: 99420 61664 /  97153 23923


1 கருத்து:

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள்.