நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 20 அக்டோபர், 2012

மனோன்மணி-சாம்பசிவனார் இலக்கியப் பரிசு அறிவிப்பு


2010 ஆம் ஆண்டு சனவரி முதல் வெளிவந்த சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் அறிவிப்பைத் தமிழ் மாருதம் இதழ் வெளியிட்டுள்ளது. தமிழ் இலக்கியம், சைவ சமயம் தொடர்பான நூல்கள் வரவேற்கப்படுகின்றன

முதல்பரிசு உருவா.10,000, 
இரண்டாம் பரிசு உருவா 6000, 
மூன்றாம் பரிசு உருவா 4000 

வழங்கப்படும்.

பரிசுக்கு நூலின் மூன்று படிகள் அனுப்ப வேண்டும்.

2012 , 31 திசம்பருக்குள் நூல்கள் வந்து சேர வேண்டும்.

நூல்களுடன் நூலாசிரியரின் தன் விவரக்குறிப்பும், புகைப்படமும் அனுப்ப வேண்டும்.

நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

முதுமுனைவர் .சா.அறிவுடை நம்பி,
தமிழ்ப்பேராசிரியர்,
27, சுப்பிரமணியர் கோயில் குறுக்குத்தெரு,
இலாசுப்பேட்டை, புதுச்சேரி- 605 008

செல்பேசி: 9360327019

1 கருத்து:

Rathnavel Natarajan சொன்னது…

எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.