
புரவலர் ஏ.சி.சுந்தரேசன் தலைமையுரை
வேலூர் மாவட்டம் ஆர்க்காடு நகரில் உள்ள தேவிநகர்,பாரதிதாசன் தெருவில் அமைந்துள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணி - ஆர்க்காடு வட்டாரக்கிளை ஏற்பாட்டில் தமிழ் இணைய அறிமுகம் இன்று(18.05.2011) காலை பத்துமணியளவில் தொடங்கியது. இயக்கப் புரவலர் திரு.ஏ.சி. சுந்தரேசன் அவர்கள் தலைமை தாங்கினார். செயலாளர் திரு.எம்.ஆர். கோவிந்தராசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் கலந்துகொண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குத் தமிழ் இணையத்தின் பல்வேறு கூறுகளை விளக்கினார். ஆசிரியர்களுக்குப் பயன்படும் இணையவழிக்கல்வி,நூலகங்கள்,தமிழ்த்தட்டச்சு, மின்னிதழ்கள் பற்றிய அறிமுகம் இன்றைய வகுப்பில் அமைந்தது.ஆர்க்காடு, சோளிங்கர்,வாலாசா, காட்டுப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள்,இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் கு.வ.மகேந்திரன் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

ஆர்வமுடன் பங்கேற்ற ஆசிரியப்பெருமக்கள்

மு.இளங்கோவன் உரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக