நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 23 ஜனவரி, 2010

புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் மக்கள்இசை தெ.செயமூர்த்தியின் தமிழிசைப்பாடல்கள்


புதுவைத் தமிழ்ச்சங்க வரவேற்புப் பதாகை

புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ்ச்சங்கத்தின் 112 ஆம் மாத நிகழ்வு இன்று 23.01.2010 மாலை 7 மணிக்குத் தமிழர் திருநாள் விழாவாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைப் புலவர் சீனு.இராமச்சந்திரன் அவர்கள் வரவேற்றார். மா.தன. அருணாசலம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழர் திருநாள் குறித்த உரையைக் கல்விச்செம்மல் முனைவர் வி.முத்து அவர்கள் வழங்கினார்.

இரவு 8 மணிக்குப் புதுச்சேரியின் புகழ்பெற்ற மண்ணிசைப் பாடகர் தெ.செயமூர்த்தி அவர்களின் தமிழிசைப்பாடல் நிகழ்ச்சி தொடங்கியது.9 மணிவரை தன் இன்னிய அணியுடன் அரங்கு அதிர மிகச்சிறந்த தமிழிசைப் பாடல்களை வழங்கினார்.நாட்டுப்புற மெட்டில் அமைந்த பல பாடல்கள் நெஞ்சில் தங்கின.பாவேந்தர்,காசி ஆனந்தன்,பெருஞ்சித்தினார்(எந்தக் கட்சியில் நீ இருந்தாலும் என்ற பாடல்.இதனை நான் ஆயிரம் முறையேனும் கேட்டிருப்பேன்.உயிர் கௌவும் பாடல் இது.)செயபாசுகரன்,பரிணாமன் உள்ளிட்ட பாவலர்களின் பாடல்களைப் பாடினார்.

மேலும் தெருக்கூத்து மெட்டில் அமைந்த பாடல்களையும் நாடுப்புறப் பாடல்கள் மெட்டில் அமைந்த பாடல்களையும் பாடி அரங்கில் இருந்தவர்களின் பாராட்டைப் பெற்றார்.இன்னிசை நிகழ்ச்சிக்கு உரிய கொடை வழங்கியவர் கல்வி வள்ளல் வி.முத்து அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.புதுவைத் தமிழறிஞர்கள் தமிழ் உணர்வாளர்கள்,கல்லூரி,ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


"கல்வி வள்ளல்" முனைவர் வி.முத்து


குழுவினருடன் செயமூர்த்தி


செயமூர்த்தி குழுவினருடன்


பாடகர் தெ.செயமூர்த்தி

முகவரி:
புதுச்சேரி தெ.செயமூர்த்தி அவர்கள்
மக்கள் இசைக்குழு,
130,அந்தோனியார் வீதி,4 ஆம் தெரு,
உழவர்கரை,புதுச்சேரி-605 010
செல்பேசி +91 9443492698

கருத்துகள் இல்லை: