
அழைப்பிதழ்
அறிஞர் மு.அருணாசலம் பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக வெளியிட்டுப் புகழ்பெற்றவர். அன்னாரின் நூல்கள் சான்றாதாரங்களாக விளங்கும் தரத்தன. அவர் தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு என்னும் இருநூல்களை எழுதி வெளியிடாமல் கையெழுத்துப் படியாக வைத்தவண்ணம் இயற்கை எய்தினார். மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் உல. பாலசுப்பிரமணியன் அவர்கள் இந்தக் கையெழுத்துப் படிகளை அரிதின் முயன்று வெளிக்கொண்டு வந்துள்ளார். நூலுருவம் தாங்கியதால் உலகத் தமிழர்கள் அனைவரும் பயன்பெற முடியும். இத்தகு அரிய பணியில் ஈடுபட்ட முனைவர் உல.பாலசுப்பிரமணியன் அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். அறிஞர் மு.அருணாசலனார் நூற்றாண்டு விழாவும், கருத்தரங்கும், நூல்கள் வெளியீட்டு விழாவும் நாளையும், மறுநாளும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளன.
அறிஞர் மு.அருணாசலனார் நூற்றாண்டு விழா
நாள்: 8.9-01.2010 நேரம் காலை 10.00 மணி
இடம்: சென்னைப் பல்கலைக்கழகம்
முனைவர் தமிழண்ணல், பேராசிரியர் சோ.ந.கந்தசாமி, பேராசிரியர் வீ.அரசு, முனைவர் க.திருவாசகம் (துணைவேந்தர்), மாண்புமிகு தங்கம். தென்னரசு (பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்), மாண்புமிகு உபயதுல்லா (வருவாய்த்துறை அமைச்சர்) உள்ளிட்டவர்கள் உரையாற்ற உள்ளனர்.

அழைப்பிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக