நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 19 மார்ச், 2009

பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கணினி,இணையத்தமிழ்த் தேசியக் கருத்தரங்கம்


அழைப்பிதழ்

பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் கணினி, இணையத்தமிழ் தேசியக்கருத்தரங்கம் 20,21.03.2009 இருநாள் நடைபெறுகிறது(வெள்ளி, காரிக்கிழமை).

முதல்நாள் முனைவர் ம.நல்லு அவர்கள் தலைமயில் நடைபெறும் தொடக்கவிழாவில் முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் முன்னிலையுரையாற்றவும் முனைவர் கோபிநாத் கணபதி அவர்கள் ஆய்வுத்தொகுப்பை வெளியிட்டுச் சிறப்புரையாற்றவும் உள்ளனர்.

முனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி) கருத்துரை வழங்குவதுடன் பிற்பகல் அமர்வில் தமிழ்த்தட்டச்சு,தமிழ் இணையத்தள வளர்ச்சி,தமிழ் மின் இதழ்கள் பற்றி காட்சி விளக்கத்துடன் சிறப்புரை வழங்க உள்ளார்.

21.03.09 காரிக்கிழமை பிற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் முனைவர் தி.நெடுஞ்செழியன், முனைவர் டேவிட் பிரபாகர்,முனைவர் மா.கணேசன் உரையாற்ற உள்ளனர்.



அழைப்பிதழ்(பின்புறம்)

கலந்துகொள்ள விரும்புவோர் பேராசிரியர் சானகிராமன்(தமிழ்த்துறைத் தலைவர்) அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

செல்பேசி எண் : 9842523869

2 கருத்துகள்:

நா. கணேசன் சொன்னது…

பெரம்பலூர் விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்!

அன்புடன்,
நா. கணேசன்

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

கருத்தரங்கம் சிறப்பாய் நிகழ வாழ்த்துகிறேன்.