நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 14 மார்ச், 2009

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப்பயிலரங்கு

  கரூரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் 15.03.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் பகல் 4மணி வரை தமிழ் இணையப்பயிலரங்கு நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தைச் சார்ந்த கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம் சார்ந்த நூலகர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு தமிழ் இணையம் பற்றி அறிய உள்ளனர். 
 
 புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் பயிலரங்கில் கலந்துகொண்டு நூலகர்களுக்குத் தமிழ் இணையம் பற்றியும், தமிழ்த்தட்டச்சு, மின் நூல்கள், இணைய இதழ்கள், வலைப்பூ உருவாக்ககம், நூலகம் சார்ந்த தளங்களை அறிமுகப்படுத்திப் பயிற்சி அளிக்கிறார். மாவட்ட மைய நூலகர் திரு.சிவக்குமார், மாவட்ட நூலக அலுவலர் திரு.செகதீசன் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். முனைவர் கடவூர் மணிமாறன் உள்ளிட்ட இணையத்தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

3 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

பல்வேறு களங்களில் விழிப்புணர்வு பரப்புவதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

நன்றி இரவி

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்