நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 7 ஜூன், 2008

திருநெல்வேலிக் கருத்தரங்கில் பேசப்பட்டவை...

  திருநெல்வேலிக் கருத்தரங்கில் முனைவர் சங்கரபாண்டி அவர்கள் இணையம் பற்றியும் அமெரிக்காவில் தமிழ்நிலை பற்றியும் விளக்கிப்பேசினார். அடுத்து காசி அவர்கள் தமிழ்மணம் பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் விளக்கினார். தமிழ் மணத்தில் உள்ள பல்வேறு வசதிகளை அவர் செய்முறை விளக்கம்வழி விளக்கினார். பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் இணையத்துறையில் தொடங்கபட்டுள்ள இம் முயற்சியைப் வாழ்த்தி பாராட்டினார். திரு.சேகர் அவர்கள் தமிழ் இணையமுயற்சிக்கு என்றும் துணைநிற்பேன் என்று உறுதியளித்தார். 
 
  மாவட்ட ஆட்சியர் திரு கோ.பிரகாஷ் அவர்கள்: இணையத்தை நல்லதற்குப் பயன்படுத்துவதுபோல் தவறானவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இச்சூழலில் இணையத்தை நல்லவற்றிற்குப் பயன்படுத்தவேண்டும். உலகில் எல்லா இனமும் மொழியைப் பாதுகாப்பதற்குப் போராடியுள்ளனர். நாமும் போராடி தமிழைப்  வளர்க்கவேண்டியுள்ளது. ஓர் இனத்தின் பல அடையாளங்கள் மாறும். மொழி மாறாது. உடலில் ஊறிப்போன இரத்தம் போன்றது மொழி. ஒவ்வொரு மொழிக்கும் சிறப்பு உண்டு. பிற மொழி தெரிந்தால்தான் முன்னேற முடியும் என்பது தவறு. தாய்மொழி அறிவு தேவை. நம்மொழி உயர்வு என்ற எண்ணம் அனைவருக்கும் வேண்டும். தமிழிலிருந்து பிறந்தவைதான் பிற திராவிடமொழிகள். இராபர்ட்டு கால்டுவெல் இதனை வெளிப்படுத்தியவர். அதுபோல் அயல்நாடுகளில் இருந்து வந்து கணேசன், சேகர் போன்றவர்கள் தமிழ்ப்பணிபுரிகின்றனர். நான் தமிழை விரும்பிப் படித்து ஆட்சிப்பணியில் வெற்றிபெற்றுள்ளேன். தமிழைச் சிதைக்காமல் வளர்க்கவேண்டும். தமிழ்மொழி எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சிபெற உள்ளது என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: