நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 15 ஜூன், 2008

தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா தொடக்கம்...

புதுச்சேரி தமிழ்ச்சங்க அரங்கில் தமிழ்க்காவல் இணைய இதழ்வெளியிட அறிஞர்பெருமக்கள் வருகை தந்துள்ளனர்.மாலை 6 மணிக்கு விழா தொடங்க உள்ளது.அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளை இணைய உலக நண்பர்களுக்கு வழங்க உள்ளேன்.அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் தமிழ் இணையம்,வலைப்பதிவு பற்றி அறிய ஆர்வமுடன் காத்துள்ளனர்.

முனைவர் இரா.திருமுருகன்,முனைவர் தமிழப்பன்,பாவலர் பரணன், திரு.சாந்தசீலன், முனைவர் மு.இளங்கோவன்,பொறிஞர் வே.முருகையன்,திரு நந்திவர்மன், திரு.இரா.செம்பியன், பேராசிரியர்.ம.இலெ.தங்கப்பா
உள்ளிட்டவர்கள் உரையாற்ற உள்ளனர்.

மீண்டும் வருவேன்...

1 கருத்து:

வல்லிசிம்ஹன் சொன்னது…

எழுத்தாளர் திரு.கி.இராசநாராயண ஐய்யா வருகிறாரா.