நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

மெல்பர்ன் தமிழ்ச்சங்கம் நடத்தும் திருவள்ளுவர் திருநாள் விழா!

 


  ஆத்திரேலியா நாட்டில் மெல்பர்ன் தமிழ்ச்சங்கம் தமிழர் மரபுத் திருநாளையொட்டி, திருவள்ளுவர் திருநாளை இணையம் வழியாகக் கொண்டாடுகின்றது.

  இந்த நிகழ்வு பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் (மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி) தலைமையில் நடைபெறுகின்றது. மெல்பர்ன் தமிழ்ச் சங்கத் தலைவர் பொறியாளர் ந. சுந்தரேசன் அவர்கள் வரவேற்புரையாற்ற உள்ளார்.

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியர் முனைவர் அ. சண்முகதாசு அவர்கள் உலகப் பொதுமறை என்னும் தலைப்பிலும், மலேயாப் பல்கலைக்கழகத்தின் முன்னை விரிவுரைஞர் ஆசான் ம. மன்னர் மன்னன் அவர்கள் திருக்குறள் சிறப்புகள் என்னும் தலைப்பிலும், சிங்கப்பூரின் தமிழ்ச் சொற்பொழிவாளர் மன்னை முனைவர் க. இராசகோபாலன் அவர்கள் ஆளுமை வளர்ச்சியில் திருக்குறள் என்னும் தலைப்பிலும் உரையாற்ற உள்ளனர்.

  மெல்பர்ன் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் சீனிவாசன் வெங்கட்ராமன் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

  புதுவைப் பேராசிரியர் மு. இளங்கோவன் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

 நாள்: 15.01.2021, நேரம்: இரவு 7.00 முதல் 8.30 மணி வரை(ஆத்திரேலியா நேரம்) / இந்தியா, இலங்கை நேரம்: பகல் 1.30 முதல் 3.00 மணி வரை.

 இணைய இணைப்பு: https://meet.google.com/ezx-szcc-xfv

 முகநூல், யூடியுபிலும் காணலாம்.

 தமிழார்வலர்களைப் பங்கேற்க அழைக்கின்றோம்.

 

கருத்துகள் இல்லை: