நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 30 டிசம்பர், 2019

கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள் – பேராசிரியர் தெ. முருகசாமி சிறப்புரை – காணொலி!





 தமிழ் உணர்வு தழைத்த உறவுடையீர்!

 உலகத் தொல்காப்பிய மன்றம் புதுச்சேரிக் கிளையின் சார்பில் 20.12.2019 மாலை, புதுவை செகா கலைக்கூடத்தில் பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள் என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்கள். பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்குப் புதுவைத் தமிழறிஞர்களும், பெங்களூரிலிருந்து திருவாளர் பார்த்தசாரதி அவர்களும், மெல்பர்ன் தமிழ்ச்சங்கத் தலைவர் பொறியாளர் ந. சுந்தரேசன் அவர்களும், சென்னையிலிருந்து திரு. சேது அவர்களும் வருகைபுரிந்து, நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

 பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் தொல்காப்பியத்திலும், கம்பராமாயணத்திலும், பிற தமிழ் நூல்களிலும் பெரும் புலமை பெற்றவர்கள். எனவே, பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களிலிருந்து அரிய சான்றுகளை எடுத்துக்காட்டி விளக்கி, இவ்வுரையை அமைத்த பேராசிரியர் அவர்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது. இம்முயற்சிக்கு ஊக்கம் நல்கி, உதவிய அனைவருக்கும் நன்றியுடையோம். இக்காணொலியைக் கண்ணுறும் அன்பர்கள் தங்கள் நண்பர்களையும் கண்டு, தமிழின்பம் பெற வலியுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ்த்தாயின் திருவடிக்கு இவ் ஆவண மலரினைப் படையலிடும் இப்பிறவி நினைந்து மகிழ்கின்றோம்.

காணொலி கேட்க இங்கு அழுத்துங்கள்.

கருத்துகள் இல்லை: