நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 8 செப்டம்பர், 2016

சுவாமி விபுலாநந்தர் வாழ்க்கை வரலாற்றை அறிவதற்கு உதவுங்கள்!




யாழ்நூல் என்னும் அரிய நூலினைப் படைத்த தவத்திரு விபுலாநந்த அடிகளாரின் பணிகள்(1892-1947) போதிய அளவு தமிழுலகுக்குத் தெரியாமல் உள்ளதை அண்மைக்காலமாக அறிகின்றேன். விபுலாநந்தரின் பன்முக ஆற்றலும் வெளிப்படும் வகையில் அவர்தம் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். எனவே விபுலாநந்தர் தொடர்புடைய அறிஞர்கள், துறவியர்கள், ஆய்வாளர்கள், அன்பர்கள், பற்றாளர்கள், ஊரினர், உறவினர் தங்களிடம் உள்ள குறிப்புகள், படங்கள், கையெழுத்துப்படிகள், மடல்கள், நூல்கள் குறித்த விவரங்களை muelangovan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொண்டு பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

கருத்துகள் இல்லை: