நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

மாமன்னன் இராசேந்திர சோழன் படம் மும்பை கப்பல் கட்டும் தளத்தில் திறக்கப்படஉள்ளது!






 அலைகடல் நடுவே பலகலம் செலுத்தியமாமன்னன் இராசேந்திர சோழனின் படம்  மும்பையில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் திறக்கப்பட உள்ள செய்தி தேனினும் இனிய செய்தியாகும். கி. பி. பத்தாம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தம் கப்பல் படையால் வெற்றி கொண்ட மாமன்னன் இராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தவன். கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பதியப்பெற்றுள்ள இப்பேரரசனின் வெற்றியையும் திறமையையும் நினைவுகூரும் முகமாக மும்பையில் உள்ள  கப்பல் கட்டும் தளத்தில் இராசேந்திர சோழன் படம் திறக்கப்பட உள்ளதாகவும் செப்டம்பர் 29, மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள விழாவில் மகாராட்டிர மாநிலத்தின் ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரும் உயரதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாகவும் அறிய முடிகின்றது. இந்த முயற்சியில் முன்னின்று உழைத்த அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அந்த நகருக்கு மேலும் ஒரு பெருமை, இப்போது நம் மன்னனால்.