நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்




சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் என்னும் தலைப்பில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதி உதவியுடன் பன்னாட்டுக் கருதரங்கம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 25, 26 ஆகிய நாள்களில் சென்னையில் நடைபெறும் இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கில் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு கட்டுரை படைக்கலாம்.

வெளிநாட்டுப் பேராளர்களும் பங்கேற்கலாம். வெளிநாட்டுப் பேராளர்கள் 70 அமெரிக்க டாலரும், இந்தியப் பேராளர்கள் உருவா 500, ஆய்வு மாணவர்கள் உருவா 350 , பங்கேற்பாளர்கள் உருவா 150 செலுத்திப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

வரைவோலை எடுக்க வேண்டிய பெயர்

Dr. Angayarkanni, Department of Tamil, Ethiraj College for Women, Chennai

கட்டுரைகள் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கருத்தரங்கக் கட்டுரைகள் நூல்வடிவில் வெளிவர உள்ளன.

கட்டுரைகள் அனுப்ப இறுதிநாள்: 30.09.2014

மின்னஞ்சல் முகவரி: tamilbk2014@gmail.com

வலைப்பதிவு: இங்கே செல்க

கட்டுரை வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:

தமிழ்த்துறைத் தலைவர்,
எத்திராஜ் மகளிர் கல்லூரி(தன்னாட்சி)
சென்னை- 600 008

தொடர்புக்கு:

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்:
முனைவர் சு. புவனேசுவரி 94444 18670

முனைவர் பா. கௌசல்யா 91763 63139


கருத்துகள் இல்லை: