நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 23 ஜனவரி, 2013

தமிழ், ஆங்கில நூல்கள் வெளியீட்டு விழா




சென்னை, காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள திரு.சு.இராமசாமி நினைவு பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் முனைவர் தா. இரா. பச்சமுத்து அவர்களின் விருப்பத்தின்படி, துணைவேந்தர் மு.பொன்னவைக்கோ அவர்களின் பெரும் முயற்சியில் தமிழ்ப்பேராயம் சிறப்பான பணிகளைச் செய்துவருகின்றது. தமிழறிஞர்களை அழைத்துப் போற்றுவதும், நூல் எழுத வாய்ப்பு நல்குவதும், அவ்வாறு எழுதப்பெற்ற நூல்களை பதிப்பித்தலும் எனப் பல்வேறு தமிழ்ப்பணிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழறிஞர்களின் அரியநூல்கள் இதனால் தமிழுலகிற்குக் கிடைத்துவருகின்றன. அவ்வகையில் நாளை 24.01.2013 காலை 10.30 மணிக்கு ஆறு நூல்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் நான்கு நூல்கள் தமிழ்நூல்கள். இரண்டுநூல்கள் ஆங்கில நூல்களாகும். இந்த நூல்வெளியீட்டு விழாவின் நிகழ்ச்சி நிரலை என்பக்கத்தில் இணைக்கின்றேன். ஆர்வலர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்கலாம்.

நாள் : 24.01.2013
நேரம் : முற்பகல் 10.30  மணி
இடம் : முனைவர் தி.பொ. கணேசன் சிற்றரங்கம்

வரவேற்புரை: முனைவர் ச.சு. இராமர் இளங்கோ அவர்கள்
                                 பதிப்பாளர், தமிழ்ப்பேராயம்

தலைமையுரை:முனைவர் மு. பொன்னவைக்கோ அவர்கள்
                                    தலைவர், தமிழ்ப்பேராயம்,
                                    துணைவேந்தர், SRM பல்கலைக்கழகம்

நூல் வெளியிட்டு,பாராட்டுரை 
தமிழ் நூல்கள்:முனைவர் தா.இரா. பச்சமுத்து அவர்கள்
 புரவலர், தமிழ்ப்பேராயம். வேந்தர், SRM பல்கலைக்கழகம்
       
ஆங்கில நூல்கள்:நீதியரசர் பு.இரா. கோகுலகிருட்டிணன் அவர்கள்
                                                                        மேனாள் தலைமை நீதியரசர்,
                                                                        சென்னை, குசராத் உயர்நீதிமன்றங்கள்,
                                                                        தலைவர், சென்னைத் தமிழிசைச் சங்கம்.

முதற் படி பெறுவோர்
தமிழ் நூல்கள்;திரு. இரவி பச்சமுத்து அவர்கள்
                                                                        தலைவர் திரு. SRM கல்விக் குழுமம்
       
ஆங்கில நூல்கள்:பேராசிரியர் ப. சத்தியநாராயணன் அவர்கள்
                                                                        தலைவர், SRM பல்கலைக்கழகம்

சாகித்தியஅகாதெமி விருதினர் திரு. தா.செல்வராசுஅவர்களுக்குப் பாராட்டு 
வேந்தர் முனைவர் தா.இரா. பச்சமுத்து அவர்கள்,சிறப்புச் செய்வார்கள்.

வாழ்த்துரை:திரு. இரவி பச்சமுத்து அவர்கள்
                            தலைவர், SRM  கல்விக் குழுமம்

                          பேராசிரியர் ப. சத்தியநாராயணன் அவர்கள்
                           தலைவர், SRM  பல்கலைக்கழகம்

                        முனைவர் நா. சேதுராமன் அவர்கள்
                         பதிவாளர், SRM  பல்கலைக்கழகம்

ஏற்புரை:நூலாசிரியர்கள்

நன்றியுரை:முனைவர் கோ. பாக்கியவதிரவி அவர்கள்
                                                   ஒருங்கிணைப்பாளர், தமிழ்ப்பேராயம்.

நிகழ்ச்சித் தொகுப்பு:திரு. கி. குணத்தொகையன் அவர்கள்
                                                        பதிப்பாசிரியர், தமிழ்ப்பேராயம்.

அனைவரும் வருக !


வெளியிடப்பெறும் தமிழ் நூல்கள்
1.       தொல்காப்பியர் காட்டும் குடும்பம்              
(ஆசிரியர் : முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள்)               

2.       தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம்                                                       
(ஆசிரியர் : மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள்)                                                

3.       தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள்                                                            
(ஆசிரியர் : முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள்)                           
4.       ஒன்றே உலகம்                                                                             
(ஆசிரியர் : தமிழறிஞர் தனிநாயக அடிகள்)

வெளியிடப்பெறும் ஆங்கில நூல்கள்
5.    Studies in Classical Tamil Literature                    
( Author : Dr. S.N. Kandaswamy )
                                                       
6.    Pathuppaattu in English                                                   
( Author : Dr. A. Dakshinamurthy )

7.    Ainkurunuru  Vol - 1                     
( Author : Dr. S.N. Kandaswamy )              

விழாவின்போது இந்நூல்கள் 25% கழிவு விலையில் வழங்கப்படும்                                             

தொடர்புக்கு:      

தமிழ்ப்பேராயம்
திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
காட்டாங்குளத்தூர் - 603203, காஞ்சிபுரம் மாவட்டம்,தமிழ்நாடு
தொலைபேசி : +91-44-2741 7375, 2741 7376

1 கருத்து:

கவியாழி சொன்னது…

இவ்விழா சிறக்க வாழ்த்துக்கள். SRM குழுமத்தின் தமிழ்தொண்டு மேலும் சிறக்கவும் பல்வேறுத் தமிழ்ப் படைப்பாளிகளை இனங்கண்டு ஊக்குவித்தால் நன்றாய் இருக்கும். மேலும் அவர்களின் குழுமத்தின் சார்பாக வெளியிடுவதும் மகிழ்ச்சிக்குரியதே.மேலும் பல விருதுகள் பெற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள்