நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 13 ஜூலை, 2012

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் பாராட்டு!

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

நாள்: 14.07.2012 காரி(சனிக்கிழமை),நேரம்: மாலை 6 மணி
இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி

முனைவர் வி முத்து அவர்கள் தலைமையில் நடைபெறும் பாராட்டுவிழாவில் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார். புதுவை அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் பெ.இராசவேலு அவர்கள் கலந்துகொண்டு மலேசித் தமிழ் எழுத்தாளர்களைப் பாராட்டிச் சிறப்புரையாற்றுகின்றார்.

தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்கள் வாழ்த்திப் பேசுகின்றார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் அவர்கள் ஏற்புரையாற்றுகின்றார்.

மாலையில் நடைபெறும் இனிய நந்தவனம் புதுவைச் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வில் சீனு. வேணுகோபால் கலந்துகொண்டு இதழின் அறிமுகவுரையாற்றுகின்றார். இனிய நந்தவனம் ஆசிரியர் த.சந்திரசேகரன் கலந்துகொண்டு ஏற்புரையாற்றுகின்றார்.

கருத்துகள் இல்லை: