நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 12 நவம்பர், 2010

கிரந்தம் அறிந்த அறிஞர்களுடன் ஒரு சந்திப்பு...

கிரந்தம் பற்றிய சில அடிப்படையான புரிதல்களுக்காகப் பல அறிஞர்களுடன் நேரிலும், தொலைபேசியிலும் உரையாடி வருகின்றேன்.

இன்று(12.11.2010) புதுவை பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பேராசிரியர் ழான் லூய்க் செவ்வியார் (Jean-Luc Chevillard), பேராசிரியர் விசய வேணுகோபால், அறிஞர் வரததேசிகன் உள்ளிட்ட அறிஞர்களுடன் உரையாடிப் பல விவரங்களைப் பெற்றேன்.

இவர்களுடன் உரையாடும்பொழுது கிரந்தம் தமிழ்நூல்களிலும் தமிழகத்திலும் எந்த அளவுப் பயன்பாட்டில் உள்ளது எனவும், கிரந்த எழுத்துகள் இல்லாமல் நம் மொழி மரபுக்காக தமிழ் ஒலிப்பில் எழுதினால் பொருள் மாறுபடும் இடங்களையும் தெளிவாக எடுத்துரைத்தனர். அறிவியல் தொழில்நுட்ப உலகில் பிறமொழிச் சொற்களைக் கையாளும்பொழுது இந்தக் கிரந்த எழுத்துகள் பயன்படுவதன் தேவையைப் பேராசிரியர் விசய வேணுகோபாலும், திரு வரததேசிகனும், பேராசிரியர் செவ்வியார் அவர்களும் எடுத்துரைத்தனர்.

தமிழ்ப் பாடல்களுக்கான விளக்கங்களைக் கிரந்த எழுத்தில் கலந்து எழுதினால் அந்தப் பகுதியைப் புரிந்துகொள்ள முடிகின்றது எனவும் அதனையே சமற்கிருதத்தை இன்று எழுதும் தேவநாகரி எழுத்துவடிவில் எழுதினால் முற்றாக வேறுபடுகின்றது எனவும் கருத்துரைத்தனர். எனவே பழைய தமிழ் நூல்களைப் படிக்க அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கிரந்த எழுத்தின் இன்றியமையாமையை விளக்கினர்.மூவரும் தமிழும் வடமொழி எழுத்து அமைப்பும் அறிந்தவர்கள்.


நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் உள்ள மணிப்பவள நடையினைப் படித்துப் பார்த்தபொழுது கிரந்த எழுத்துகள் தேவை என்பது போன்ற ஒரு நிலையை உணரமுடிகின்றது. ஆனால் தனிச்சிறப்பு மிக்க தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களும் எழுத்துகளும் கலந்து கிடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வது மொழிக்காப்பாக இருக்காது. அத்தகு பிறமொழிச்சொற்களைக் களைந்து தமிழில் எழுதும்பொழுதுதான் தமிழ் தமிழாக இருக்கும். எனவே நாம் தமிழ்நெடுங்கணக்கில் பிற எழுத்துகளைச் சேர்க்காமலும் (கிரந்தம் உட்பட), தமிழ் எழுத்துகளைப் பிறமொழி எழுத்து அட்டவணைகளில் இணைக்காமலும் இருப்பதே சிறப்பு.

மணிப்பவள நடையைத் தாங்கி நிற்கும் நூல்கள் யாவும் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான அறிவைத் தாங்கி நிற்பதாக இல்லை. மாறாக அக்காலத்தில் இருந்த வடமொழியறிந்த தமிழ்ப்புலவர்கள் அரசனிடத்தும், சமூகத்திலும் தம் பெயர்,புலமையை நிலைநாட்ட செய்த வேலைகள் என்ற அளவில் நிறுத்திக்கொள்ளவேண்டும். அவர்களின் அத்தகு உரைவரையும் போக்கினை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வரலாறு காட்டுகின்றது. எனவே இவையெல்லாம் எளிய காரணங்களாகவே தெரிகின்றன.

பிறமொழி எழுத்துகள், சொற்கள் இல்லாமல் எழுதமுடியாது என்ற இந்தக் கருத்துகள் யாவும் மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் காலத்திலேயே தவிடுபொடியாயின என்பதைக் கண்ணெதிரில் கண்டோம். இன்று கிரந்தத்தைத் தமிழில் கலக்க ஒப்பினால் இன்றைய தொலைக்காட்சி, திரைப்படங்களால் தமிழர் வாழ்வில் கலந்துவரும் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை எழுதும் எழுத்துகளையும் தமிழில் கலந்து எழுத எதிர்காலத்தில் மக்கள் முயற்சி செய்வார்கள். இன்றும் இந்த நிலையை ஓரிரு விளம்பரப் பலகைககளில் காணமுடிகின்றது. பண்பலை வானொலிகளில் வலிய ஆங்கிலத் திணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றையெல்லாம் எடுத்துக்காட்டாகக் கூறி ஆங்கிலத்தைத் தமிழில் கலக்க இயலுமா?

தமிழில் பிறமொழிச் சொற்கள், பிறமொழி ஒலிப்புகள் இல்லாமல் ஏடுகள் நடத்தித் 'தென்மொழி'யாகவும், 'தமிழ்ச்சிட்டா'கவும், 'தமிழ்நிலமா'கவும் வெளிவந்த பழைய வரலாற்றையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அதுபோல் மறைமலையடிகளால் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் என்று மும்மொழிப் புலமை பெற்றிருந்தும் தூய தமிழில் எழுதித் தமிழ்ச் சிறப்பை நிலைநாட்டினார். அதுபோல் பாவாணரும் இனிக்க இனிக்க, மணக்க மணக்கத் தமிழில் எழுதித் தமிழ்ச் சிறப்பைப் பல நூல்களாக வெளிப்படுத்தினார். தமிழ் மரபுப்படி எழுதுவதும், இடர்ப்படும் அருகிய இடங்களில் அடைப்பில் பிறமொழிச் சொற்களை, எழுத்துகளை எழுதிப் புலப்படுத்துவதும் தமிழுக்கும் நல்லது தமிழர்களுக்கும் நல்லது என்ற முடிவுக்கு நான் வந்தேன்.


செவ்வியார், விசயவேணுகோபால்



செவியார், விசயவேணுகோபால், வரத தேசிகர்



மு.இ, வரத தேசிகர், செவ்வியார்


கிரந்தம் உயிர் எழுத்துகள்



கிரந்த மெய்யெழுத்துக்கள்



சிறீ இரமணசர்மா(அட்டவணை)

12 கருத்துகள்:

Ramaprabhu Veeraraghavan சொன்னது…

தமிழ்ல இருக்கிற வேதம் உச்சரிப்புகள் எடுத்துக்காட்டாக "த" ஒரே சப்தத்தை குறிக்கும், தேவநாகரி சேர்ந்தால் முறையே மூன்றாவது நான்காவது சப்த்தத்தை பெறக்கூடும். இன்றைய எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் பிராமணர்களை குறிவைத்து பேசி மகிழ்ச்சி அடைகின்றனர். எப்பவும் மொழிகளை வளர்ப்பார்களே தவிர சேர்க்கவேண்டும் என்றோ போராட்டம் செய்தது கிடையாது . ஏன் நாலாயிர திவ்ய பிரபந்தம் தமிழ் தானே...... 4000 பாட்டுக்கள் அந்தாதி வடிவத்தில் எழுதப்பெற்றவை..... அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா...

Ramaprabhu Veeraraghavan சொன்னது…

தமிழ்ல இருக்கிற வேதம் உச்சரிப்புகள் எடுத்துக்காட்டாக "த" ஒரே சப்தத்தை குறிக்கும், தேவநாகரி சேர்ந்தால் முறையே மூன்றாவது நான்காவது சப்த்தத்தை பெறக்கூடும். இன்றைய எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் பிராமணர்களை குறிவைத்து பேசி மகிழ்ச்சி அடைகின்றனர். எப்பவும் மொழிகளை வளர்ப்பார்களே தவிர சேர்க்கவேண்டும் என்றோ போராட்டம் செய்தது கிடையாது . ஏன் நாலாயிர திவ்ய பிரபந்தம் தமிழ் தானே...... 4000 பாட்டுக்கள் அந்தாதி வடிவத்தில் எழுதப்பெற்றவை..... அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா...

வானவன் யோகி சொன்னது…

தமிழ் தவிர வேறொரு மொழி அறியா எனக்கு,வேற்று மொழிகள் எவ்வளவு உயந்ததெனினும் அவை உயர்வானதாக உணர இயலவில்லை.

மற்ற இந்திய மொழிகளைப் படிக்கவோ,பேசவோ.விடாத உங்களைப் போன்ற படித்த பேரறிஞர்கள்,மற்ற மொழிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்த்ததுண்டா?

மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மொழிதான் வளர இயலும்.உலகளாவிய ஆங்கிலம் கூட பல சொற்களையே அதன் மொழியாக அறிவித்துக் கொள்வது தாங்கள் அறியாததல்ல.

தற்போதைய எழுத்துக்களும் கூட வீரமாமுனிவர் என்ற ”பெஸ்கி” பாதிரியார் செப்பணிட்டதே என்பதும் தமிழுலகம் அறிந்ததே.

சில சொற்களின் உச்சரிப்பைச் சரியாக உச்சரிக்க நம் மொழிக்கு இயலவில்லை எனில்,அதற்குண்டான சரியான உச்சரிப்பைத்தரும் எழுத்துகளைச் சேர்த்துக் கொள்வது நமக்கு பலனளிப்பதாகவே இருக்கும் என என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.

குறிப்பாக, வரலாற்றில் பதிக்கப் பெற்ற ஷாஜஹான் என்ற பெயரை ”சாசகான்” என்று கூறிப் பார்த்தால் எனக்கே சிரிப்பாக வருவதுடன் நம் மொழிக்கு இதை சரியாக உச்சரிக்கும் வலு இல்லை எனும் போது விக்கித்து நிற்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

தங்களுக்குச் ”சாசகான்” தான் சரியெனத் தோன்றலாம்.ஏனெனில் தாங்கள் புலமை பெற்றவராதலால் எதுவும் சரியாகவே இருக்கும்.

ஆனால் என் போன்ற அரைகுறைகள்
”ஷாஜஹான்” தான் சரியென நினைக்கும் நிலையில் உள்ளோம்.

மேற்கூறியதில் தவறேதும் இருப்பின் தற்குறியாகிய எனது சிறுபிழைகளை பெரியோராகிய நீவிர் பொறுத்தல் தகும் என்றே எண்ணுகிறேன்.

பின்குறிப்பு;நம்மொழியை எல்லாமொழிகளின் சரியான உச்சரிப்பைத் தரும் புது எழுத்துக்களையாவது உருவாக்கம் செய்யாமல் வலு இன்றி நொண்டியாக்கி விட்டுச் செல்லுதல்... வாய்ச்சொல் வீரர்களை மட்டுமே பெற்றதற்காக வரலாறு பழி கூறும்..

கோவணத்தை விட்டு நாம் மட்டும் முழுக்காற்சட்டைக்குள் நுழையலாம்.ஆனால் நம்மொழி நாகரிகத்திற்கெல்லாம் வராமல் பழைய கோவணத்தில் இருப்பதே சிறப்பென்றால் வருங்காலம் நம்மையும் நம்மொழியையும் தூக்கி எறியத்தயங்காது.

இப்படிக்கு,
வருத்தத்துடன் ஒரு தமிழ் தற்குறி

வானவன் யோகி சொன்னது…

தமிழ் தவிர வேறொரு மொழி அறியா எனக்கு,வேற்று மொழிகள் எவ்வளவு உயந்ததெனினும் அவை உயர்வானதாக உணர இயலவில்லை.

மற்ற இந்திய மொழிகளைப் படிக்கவோ,பேசவோ.விடாத உங்களைப் போன்ற படித்த பேரறிஞர்கள்,மற்ற மொழிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்த்ததுண்டா?

மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மொழிதான் வளர இயலும்.உலகளாவிய ஆங்கிலம் கூட பல சொற்களையே அதன் மொழியாக அறிவித்துக் கொள்வது தாங்கள் அறியாததல்ல.

தற்போதைய எழுத்துக்களும் கூட வீரமாமுனிவர் என்ற ”பெஸ்கி” பாதிரியார் செப்பணிட்டதே என்பதும் தமிழுலகம் அறிந்ததே.

சில சொற்களின் உச்சரிப்பைச் சரியாக உச்சரிக்க நம் மொழிக்கு இயலவில்லை எனில்,அதற்குண்டான சரியான உச்சரிப்பைத்தரும் எழுத்துகளைச் சேர்த்துக் கொள்வது நமக்கு பலனளிப்பதாகவே இருக்கும் என என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.

குறிப்பாக, வரலாற்றில் பதிக்கப் பெற்ற ஷாஜஹான் என்ற பெயரை ”சாசகான்” என்று கூறிப் பார்த்தால் எனக்கே சிரிப்பாக வருவதுடன் நம் மொழிக்கு இதை சரியாக உச்சரிக்கும் வலு இல்லை எனும் போது விக்கித்து நிற்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

தங்களுக்குச் ”சாசகான்” தான் சரியெனத் தோன்றலாம்.ஏனெனில் தாங்கள் புலமை பெற்றவராதலால் எதுவும் சரியாகவே இருக்கும்.

ஆனால் என் போன்ற அரைகுறைகள்
”ஷாஜஹான்” தான் சரியென நினைக்கும் நிலையில் உள்ளோம்.

மேற்கூறியதில் தவறேதும் இருப்பின் தற்குறியாகிய எனது சிறுபிழைகளை பெரியோராகிய நீவிர் பொறுத்தல் தகும் என்றே எண்ணுகிறேன்.

பின்குறிப்பு;நம்மொழியை எல்லாமொழிகளின் சரியான உச்சரிப்பைத் தரும் புது எழுத்துக்களையாவது உருவாக்கம் செய்யாமல் வலு இன்றி நொண்டியாக்கி விட்டுச் செல்லுதல்... வாய்ச்சொல் வீரர்களை மட்டுமே பெற்றதற்காக வரலாறு பழி கூறும்..

கோவணத்தை விட்டு நாம் மட்டும் முழுக்காற்சட்டைக்குள் நுழையலாம்.ஆனால் நம்மொழி நாகரிகத்திற்கெல்லாம் வராமல் பழைய கோவணத்தில் இருப்பதே சிறப்பென்றால் வருங்காலம் நம்மையும் நம்மொழியையும் தூக்கி எறியத்தயங்காது.

இப்படிக்கு,
வருத்தத்துடன் ஒரு தமிழ் தற்குறி

வானவன் யோகி சொன்னது…

தமிழ் தவிர வேறொரு மொழி அறியா எனக்கு,வேற்று மொழிகள் எவ்வளவு உயந்ததெனினும் அவை உயர்வானதாக உணர இயலவில்லை.

மற்ற இந்திய மொழிகளைப் படிக்கவோ,பேசவோ.விடாத உங்களைப் போன்ற படித்த பேரறிஞர்கள்,மற்ற மொழிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்த்ததுண்டா?

மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மொழிதான் வளர இயலும்.உலகளாவிய ஆங்கிலம் கூட பல சொற்களையே அதன் மொழியாக அறிவித்துக் கொள்வது தாங்கள் அறியாததல்ல.

தற்போதைய எழுத்துக்களும் கூட வீரமாமுனிவர் என்ற ”பெஸ்கி” பாதிரியார் செப்பணிட்டதே என்பதும் தமிழுலகம் அறிந்ததே.

சில சொற்களின் உச்சரிப்பைச் சரியாக உச்சரிக்க நம் மொழிக்கு இயலவில்லை எனில்,அதற்குண்டான சரியான உச்சரிப்பைத்தரும் எழுத்துகளைச் சேர்த்துக் கொள்வது நமக்கு பலனளிப்பதாகவே இருக்கும் என என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.

குறிப்பாக, வரலாற்றில் பதிக்கப் பெற்ற ஷாஜஹான் என்ற பெயரை ”சாசகான்” என்று கூறிப் பார்த்தால் எனக்கே சிரிப்பாக வருவதுடன் நம் மொழிக்கு இதை சரியாக உச்சரிக்கும் வலு இல்லை எனும் போது விக்கித்து நிற்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

தங்களுக்குச் ”சாசகான்” தான் சரியெனத் தோன்றலாம்.ஏனெனில் தாங்கள் புலமை பெற்றவராதலால் எதுவும் சரியாகவே இருக்கும்.

ஆனால் என் போன்ற அரைகுறைகள்
”ஷாஜஹான்” தான் சரியென நினைக்கும் நிலையில் உள்ளோம்.

மேற்கூறியதில் தவறேதும் இருப்பின் தற்குறியாகிய எனது சிறுபிழைகளை பெரியோராகிய நீவிர் பொறுத்தல் தகும் என்றே எண்ணுகிறேன்.

பின்குறிப்பு;நம்மொழியை எல்லாமொழிகளின் சரியான உச்சரிப்பைத் தரும் புது எழுத்துக்களையாவது உருவாக்கம் செய்யாமல் வலு இன்றி நொண்டியாக்கி விட்டுச் செல்லுதல்... வாய்ச்சொல் வீரர்களை மட்டுமே பெற்றதற்காக வரலாறு பழி கூறும்..

கோவணத்தை விட்டு நாம் மட்டும் முழுக்காற்சட்டைக்குள் நுழையலாம்.ஆனால் நம்மொழி நாகரிகத்திற்கெல்லாம் வராமல் பழைய கோவணத்தில் இருப்பதே சிறப்பென்றால் வருங்காலம் நம்மையும் நம்மொழியையும் தூக்கி எறியத்தயங்காது.

இப்படிக்கு,
வருத்தத்துடன் ஒரு தமிழ் தற்குறி

வானவன் யோகி சொன்னது…

தமிழ் தவிர வேறொரு மொழி அறியா எனக்கு,வேற்று மொழிகள் எவ்வளவு உயந்ததெனினும் அவை உயர்வானதாக உணர இயலவில்லை.

மற்ற இந்திய மொழிகளைப் படிக்கவோ,பேசவோ.விடாத உங்களைப் போன்ற படித்த பேரறிஞர்கள்,மற்ற மொழிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்த்ததுண்டா?

மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மொழிதான் வளர இயலும்.உலகளாவிய ஆங்கிலம் கூட பல சொற்களையே அதன் மொழியாக அறிவித்துக் கொள்வது தாங்கள் அறியாததல்ல.

தற்போதைய எழுத்துக்களும் கூட வீரமாமுனிவர் என்ற ”பெஸ்கி” பாதிரியார் செப்பணிட்டதே என்பதும் தமிழுலகம் அறிந்ததே.

சில சொற்களின் உச்சரிப்பைச் சரியாக உச்சரிக்க நம் மொழிக்கு இயலவில்லை எனில்,அதற்குண்டான சரியான உச்சரிப்பைத்தரும் எழுத்துகளைச் சேர்த்துக் கொள்வது நமக்கு பலனளிப்பதாகவே இருக்கும் என என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.

குறிப்பாக, வரலாற்றில் பதிக்கப் பெற்ற ஷாஜஹான் என்ற பெயரை ”சாசகான்” என்று கூறிப் பார்த்தால் எனக்கே சிரிப்பாக வருவதுடன் நம் மொழிக்கு இதை சரியாக உச்சரிக்கும் வலு இல்லை எனும் போது விக்கித்து நிற்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

தங்களுக்குச் ”சாசகான்” தான் சரியெனத் தோன்றலாம்.ஏனெனில் தாங்கள் புலமை பெற்றவராதலால் எதுவும் சரியாகவே இருக்கும்.

ஆனால் என் போன்ற அரைகுறைகள்
”ஷாஜஹான்” தான் சரியென நினைக்கும் நிலையில் உள்ளோம்.

மேற்கூறியதில் தவறேதும் இருப்பின் தற்குறியாகிய எனது சிறுபிழைகளை பெரியோராகிய நீவிர் பொறுத்தல் தகும் என்றே எண்ணுகிறேன்.

பின்குறிப்பு;நம்மொழியை எல்லாமொழிகளின் சரியான உச்சரிப்பைத் தரும் புது எழுத்துக்களையாவது உருவாக்கம் செய்யாமல் வலு இன்றி நொண்டியாக்கி விட்டுச் செல்லுதல்... வாய்ச்சொல் வீரர்களை மட்டுமே பெற்றதற்காக வரலாறு பழி கூறும்..

கோவணத்தை விட்டு நாம் மட்டும் முழுக்காற்சட்டைக்குள் நுழையலாம்.ஆனால் நம்மொழி நாகரிகத்திற்கெல்லாம் வராமல் பழைய கோவணத்தில் இருப்பதே சிறப்பென்றால் வருங்காலம் நம்மையும் நம்மொழியையும் தூக்கி எறியத்தயங்காது.

இப்படிக்கு,
வருத்தத்துடன் ஒரு தமிழ் தற்குறி

வானவன் யோகி சொன்னது…

தமிழ் தவிர வேறொரு மொழி அறியா எனக்கு,வேற்று மொழிகள் எவ்வளவு உயந்ததெனினும் அவை உயர்வானதாக உணர இயலவில்லை.

மற்ற இந்திய மொழிகளைப் படிக்கவோ,பேசவோ.விடாத உங்களைப் போன்ற படித்த பேரறிஞர்கள்,மற்ற மொழிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்த்ததுண்டா?

மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மொழிதான் வளர இயலும்.உலகளாவிய ஆங்கிலம் கூட பல சொற்களையே அதன் மொழியாக அறிவித்துக் கொள்வது தாங்கள் அறியாததல்ல.

தற்போதைய எழுத்துக்களும் கூட வீரமாமுனிவர் என்ற ”பெஸ்கி” பாதிரியார் செப்பணிட்டதே என்பதும் தமிழுலகம் அறிந்ததே.

சில சொற்களின் உச்சரிப்பைச் சரியாக உச்சரிக்க நம் மொழிக்கு இயலவில்லை எனில்,அதற்குண்டான சரியான உச்சரிப்பைத்தரும் எழுத்துகளைச் சேர்த்துக் கொள்வது நமக்கு பலனளிப்பதாகவே இருக்கும் என என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.

குறிப்பாக, வரலாற்றில் பதிக்கப் பெற்ற ஷாஜஹான் என்ற பெயரை ”சாசகான்” என்று கூறிப் பார்த்தால் எனக்கே சிரிப்பாக வருவதுடன் நம் மொழிக்கு இதை சரியாக உச்சரிக்கும் வலு இல்லை எனும் போது விக்கித்து நிற்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

தங்களுக்குச் ”சாசகான்” தான் சரியெனத் தோன்றலாம்.ஏனெனில் தாங்கள் புலமை பெற்றவராதலால் எதுவும் சரியாகவே இருக்கும்.

ஆனால் என் போன்ற அரைகுறைகள்
”ஷாஜஹான்” தான் சரியென நினைக்கும் நிலையில் உள்ளோம்.

மேற்கூறியதில் தவறேதும் இருப்பின் தற்குறியாகிய எனது சிறுபிழைகளை பெரியோராகிய நீவிர் பொறுத்தல் தகும் என்றே எண்ணுகிறேன்.

பின்குறிப்பு;நம்மொழியை எல்லாமொழிகளின் சரியான உச்சரிப்பைத் தரும் புது எழுத்துக்களையாவது உருவாக்கம் செய்யாமல் வலு இன்றி நொண்டியாக்கி விட்டுச் செல்லுதல்... வாய்ச்சொல் வீரர்களை மட்டுமே பெற்றதற்காக வரலாறு பழி கூறும்..

கோவணத்தை விட்டு நாம் மட்டும் முழுக்காற்சட்டைக்குள் நுழையலாம்.ஆனால் நம்மொழி நாகரிகத்திற்கெல்லாம் வராமல் பழைய கோவணத்தில் இருப்பதே சிறப்பென்றால் வருங்காலம் நம்மையும் நம்மொழியையும் தூக்கி எறியத்தயங்காது.

இப்படிக்கு,
வருத்தத்துடன் ஒரு தமிழ் தற்குறி

வானவன் யோகி சொன்னது…

தமிழ் தவிர வேறொரு மொழி அறியா எனக்கு,வேற்று மொழிகள் எவ்வளவு உயந்ததெனினும் அவை உயர்வானதாக உணர இயலவில்லை.

மற்ற இந்திய மொழிகளைப் படிக்கவோ,பேசவோ.விடாத உங்களைப் போன்ற படித்த பேரறிஞர்கள்,மற்ற மொழிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்த்ததுண்டா?

மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மொழிதான் வளர இயலும்.உலகளாவிய ஆங்கிலம் கூட பல சொற்களையே அதன் மொழியாக அறிவித்துக் கொள்வது தாங்கள் அறியாததல்ல.

தற்போதைய எழுத்துக்களும் கூட வீரமாமுனிவர் என்ற ”பெஸ்கி” பாதிரியார் செப்பணிட்டதே என்பதும் தமிழுலகம் அறிந்ததே.

சில சொற்களின் உச்சரிப்பைச் சரியாக உச்சரிக்க நம் மொழிக்கு இயலவில்லை எனில்,அதற்குண்டான சரியான உச்சரிப்பைத்தரும் எழுத்துகளைச் சேர்த்துக் கொள்வது நமக்கு பலனளிப்பதாகவே இருக்கும் என என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.

குறிப்பாக, வரலாற்றில் பதிக்கப் பெற்ற ஷாஜஹான் என்ற பெயரை ”சாசகான்” என்று கூறிப் பார்த்தால் எனக்கே சிரிப்பாக வருவதுடன் நம் மொழிக்கு இதை சரியாக உச்சரிக்கும் வலு இல்லை எனும் போது விக்கித்து நிற்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

தங்களுக்குச் ”சாசகான்” தான் சரியெனத் தோன்றலாம்.ஏனெனில் தாங்கள் புலமை பெற்றவராதலால் எதுவும் சரியாகவே இருக்கும்.

ஆனால் என் போன்ற அரைகுறைகள்
”ஷாஜஹான்” தான் சரியென நினைக்கும் நிலையில் உள்ளோம்.

மேற்கூறியதில் தவறேதும் இருப்பின் தற்குறியாகிய எனது சிறுபிழைகளை பெரியோராகிய நீவிர் பொறுத்தல் தகும் என்றே எண்ணுகிறேன்.

பின்குறிப்பு;நம்மொழியை எல்லாமொழிகளின் சரியான உச்சரிப்பைத் தரும் புது எழுத்துக்களையாவது உருவாக்கம் செய்யாமல் வலு இன்றி நொண்டியாக்கி விட்டுச் செல்லுதல்... வாய்ச்சொல் வீரர்களை மட்டுமே பெற்றதற்காக வரலாறு பழி கூறும்..

கோவணத்தை விட்டு நாம் மட்டும் முழுக்காற்சட்டைக்குள் நுழையலாம்.ஆனால் நம்மொழி நாகரிகத்திற்கெல்லாம் வராமல் பழைய கோவணத்தில் இருப்பதே சிறப்பென்றால் வருங்காலம் நம்மையும் நம்மொழியையும் தூக்கி எறியத்தயங்காது.

இப்படிக்கு,
வருத்தத்துடன் ஒரு தமிழ் தற்குறி

வானவன் யோகி சொன்னது…

தமிழ் தவிர வேறொரு மொழி அறியா எனக்கு,வேற்று மொழிகள் எவ்வளவு உயந்ததெனினும் அவை உயர்வானதாக உணர இயலவில்லை.

மற்ற இந்திய மொழிகளைப் படிக்கவோ,பேசவோ.விடாத உங்களைப் போன்ற படித்த பேரறிஞர்கள்,மற்ற மொழிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்த்ததுண்டா?

மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மொழிதான் வளர இயலும்.உலகளாவிய ஆங்கிலம் கூட பல சொற்களையே அதன் மொழியாக அறிவித்துக் கொள்வது தாங்கள் அறியாததல்ல.

தற்போதைய எழுத்துக்களும் கூட வீரமாமுனிவர் என்ற ”பெஸ்கி” பாதிரியார் செப்பணிட்டதே என்பதும் தமிழுலகம் அறிந்ததே.

சில சொற்களின் உச்சரிப்பைச் சரியாக உச்சரிக்க நம் மொழிக்கு இயலவில்லை எனில்,அதற்குண்டான சரியான உச்சரிப்பைத்தரும் எழுத்துகளைச் சேர்த்துக் கொள்வது நமக்கு பலனளிப்பதாகவே இருக்கும் என என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.

வானவன் யோகி சொன்னது…

குறிப்பாக, வரலாற்றில் பதிக்கப் பெற்ற ஷாஜஹான் என்ற பெயரை ”சாசகான்” என்று கூறிப் பார்த்தால் எனக்கே சிரிப்பாக வருவதுடன் நம் மொழிக்கு இதை சரியாக உச்சரிக்கும் வலு இல்லை எனும் போது விக்கித்து நிற்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

தங்களுக்குச் ”சாசகான்” தான் சரியெனத் தோன்றலாம்.ஏனெனில் தாங்கள் புலமை பெற்றவராதலால் எதுவும் சரியாகவே இருக்கும்.

ஆனால் என் போன்ற அரைகுறைகள்
”ஷாஜஹான்” தான் சரியென நினைக்கும் நிலையில் உள்ளோம்.

மேற்கூறியதில் தவறேதும் இருப்பின் தற்குறியாகிய எனது சிறுபிழைகளை பெரியோராகிய நீவிர் பொறுத்தல் தகும் என்றே எண்ணுகிறேன்.

பின்குறிப்பு;நம்மொழியை எல்லாமொழிகளின் சரியான உச்சரிப்பைத் தரும் புது எழுத்துக்களையாவது உருவாக்கம் செய்யாமல் வலு இன்றி நொண்டியாக்கி விட்டுச் செல்லுதல்... வாய்ச்சொல் வீரர்களை மட்டுமே பெற்றதற்காக வரலாறு பழி கூறும்..

கோவணத்தை விட்டு நாம் மட்டும் முழுக்காற்சட்டைக்குள் நுழையலாம்.ஆனால் நம்மொழி நாகரிகத்திற்கெல்லாம் வராமல் பழைய கோவணத்தில் இருப்பதே சிறப்பென்றால் வருங்காலம் நம்மையும் நம்மொழியையும் தூக்கி எறியத்தயங்காது.

இப்படிக்கு,
வருத்தத்துடன் ஒரு தமிழ் தற்குறி

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

திரு.வானவன் யோகி
தாங்கள் யார் என்று அறியேன்.எனினும் தங்கள் மடலில் உள்ள கருத்துகளை மட்டும் கண்டு சில சொற்கள்:
பிறமொழிகளைக் கற்க வேண்டாம் என்று யானோ என்னொத்த உணர்வினர்களோ எந்தச்சூழலிலும் சொல்வதில்லை.பிறமொழிகளைக் கற்பதில் தவறில்லை.பன்மொழி கற்று அறிஞராகலாம். பிறமொழிச்சொற்களை,எழுத்துகளைத் தமிழில் கலவாமல் எழுதுங்கள் பேசுங்கள் என்கின்றோம்.இதுபோல் பலருக்கு விடை எழுதியதால் இதற்குமேல் விரித்து எழுதவில்லை.

ஆங்கிலமொழி நிலை வேறு.தமிழின் நிலைவேறு.ஆங்கிலம் ஒரு பிறமொழிச்சொல்லை ஏற்றால் அது அம்மொழிக்கு வரவாக அமையும்.
தமிழ் பிறமொழிச்சொல் ஒன்றை ஏற்றால் வழக்கில் உள்ள ஒரு சொல்லை இழக்கின்றது என்று பொருள்.

எ.கா.சன்னல் நுழைந்ததால் காலதர் மறைந்தது.

தற்குறியாக மறையாதீர்கள்.
தமிழ் ஆர்வலராக உலகை வலம் வருக.
வாழ்த்துகளுடன் வரவேற்கின்றேன்.

வானவன் யோகி சொன்னது…

தர்க்கவாதம் முடிவற்றதாகையால்,
தங்கள் தமிழ்ச்சேவைக்கு இடையூறு ஆதலால் மேற்கொண்டு தொந்தரவு அளிக்க விரும்பாததாலும்

தாங்களாவது நந்தமிழுக்கு புது வழிகாட்டுவீர்கள்/காட்டவேண்டும் என்ற நம்பிக்கையில் வாழ்த்தி வணங்குகிறேன் .

பல பணிகளுக்கு மத்தியிலும் உடனுக்குடன் பதிலளித்த தங்களுக்கு எனது நன்றியறிதல்களை காணிக்கையாக்குகிறேன். நன்றி