நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

புதுச்சேரி-ஏம்பலம் அரசுப் பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம்


ஆர்வமுடன் பங்கேற்ற மாணவிகள்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஏம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் இணையம் அறிமுகம் இன்று(23.02.2010) காட்சி விளக்கத்துடன் நடைபெற்றது. பிற்பகல் 3.30 மணிமுதல் மாலை 5 மணி வரை தமிழ்த் தட்டச்சு(99 விசைப் பலகை), மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், மின்னஞ்சல் செய்தல், வலைப்பூ உருவாக்கம், தமிழ் விக்கிப்பீடியா, மின்னிதழ்கள் காட்சிக்கு உட்படுத்தப்பட்டு விளக்கப்பட்டன.

ஏம்பலம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.ஏம்பலம் செல்வம் அவர்களின் முயற்சியால் இந்த இணைய அறிமுக நிகழ்வு சிறப்புற நடந்தது. சிற்றூர்ப் புற மாணவர்கள் 200 பேருக்கும் மேல் அமர்ந்து கற்றுக்கொண்டனர். இவர்கள் இதுவரை கணிப்பொறி பற்றிய அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தனர். தமிழ் வழியில் எளிமையாகச் சொல்லி அறிமுகம் செய்ததால் மாணவ-மாணவிகளுக்கு இப் பயிற்சி மிகவும் உதவியாக இருந்தது. பள்ளியின் தலைமையாசிரியர், பிற ஆசிரியப் பெருமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


ஏம்பலம் திரு.செல்வம் அவர்கள்


மாணவர்களின் பங்கேற்பு


திரு.செல்வம் அவர்களின் வாழ்த்துரை
(தலைமையாசிரியரும் நானும் அமர்ந்துள்ளோம்)

1 கருத்து:

வரதராஜலு .பூ சொன்னது…

நல்லது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் தொடர வேண்டும்