நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 7 ஏப்ரல், 2008

வாழ்த்து இணையப்பக்கத்தில் என்னைப் பற்றி...

தன்மானத் தமிழ் மறவராக விளங்கிய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் மகனாரும் தமிழ்ப்பணியில் தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டவருமான பேராசிரியர் முனைவர் இ. மறைமலை அவர்கள் தமிழ்ப்பணியில் முன்னின்று உழைப்பவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக வாழ்த்து என்னும் இணையப்பக்கத்தை உருவாக்கியுள்ளார். அதில் என்னை ஊக்கப்படுத்தும் வண்ணம் என் வாழ்க்கைக் குறிப்பைப் படத்துடன் வெளியிட்டுள்ளார்.நீங்களும் கண்டு மகிழலாம்.

பேராசிரியர் அவர்களுக்கு என் நன்றி.

கருத்துகள் இல்லை: