நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 17 அக்டோபர், 2023

வயல்வெளிப் பதிப்பகம் சார்பில் முனைவர் கி. பாண்டியனின் சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள் நூல் வெளியீடு...

 


வயல்வெளிப் பதிப்பகம் சார்பில் முனைவர் கி. பாண்டியன்   அவர்கள் எழுதிய சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள் என்ற நூல் விரைவில் வெளிவர உள்ளது 

இது சித்தர் பாடல்களை முழுமையாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஆய்வு நூல்; 

1. தமிழ் இலக்கியத்தில் சித்தர்கள், 2. சித்தர்கள் கூறும் சமுதாயச் செய்திகள், 3. சித்தர்கள் உணர்த்தும் இறையுணர்வு, 4. சித்தர்கள் புலப்படுத்தும் அறநெறிகள், 5.சித்தர்கள் சாடும் போலித்துறவும் பொய் ஆன்மீகமும் ஆகிய ஐந்து தலைப்புகளில் உள்ளடக்கம் அமைந்துள்ளது. 

நூல் தேவைக்குத் தொடர்புகொள்ளவும் 

muetamil@gmail.com 

+91 9442029053

சனி, 7 அக்டோபர், 2023

வயல்வெளிப் பதிப்பகத்தின் வலைப்பதிவு



என் பணிகளுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைவது வயல்வெளிப் பதிப்பகத்தின் சார்பில் நூல்களை வெளியிடுவதாகும். அவ்வகையில் சிறியதும் பெரியதுமாக இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. நூல்களைக் குறித்த விவரங்கள், பதிப்பகம் சார்ந்த செய்திகளைப் பகிர்ந்துகொள்ள வயல்வெளிப் பதிப்பகம் என்னும் பெயரில் வலைப்பதிவு ஒன்றைத் தொடங்கியுள்ளேன். பதிப்பகம் சார்ந்த செய்திகள் இவ்வலைப்பதிவில் இடம்பெறும். தமிழார்வலர்கள் இவ்வலைப்பதிவைப் பயன்படுத்தி வயல்வெளிப் பதிப்பகம் குறித்த மேலதிக விவரங்களைப் பெறலாம்.
வலைப்பதிவு முகவரி: https://vayalvelipathippagam.blogspot.com/