நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 29 மே, 2025

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு – 2025


  


 தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து பன்னாட்டு இசைத்தமிழ் மாநாட்டினை 2025 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 26 ஆம் நாள் முதல் 31 ஆம் நாள் வரை நடத்துகின்றன. இசைவிழா, ஆய்வரங்கம், பயிலரங்கம், நூல்கள் வெளியீடு, இசைக்கருவிகள் வழங்கல் என்னும் அமைப்பில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

 தமிழிசைக் காவலராக விளங்கிய அண்ணாமலை அரசரின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில் அவர்களின் தமிழிசைப் பணிகளை நினைவில் ஏந்தி, இந்த இசைத்தமிழ் மாநாடு நடைபெறுவது தமிழிசைத் துறைக்கு மிகப்பெரிய ஆக்கமாகும். தமிழிசை ஆர்வலர்கள், ஆய்வறிஞர்கள், மாணவர்கள் இந்த மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியும், மாநாட்டில் பங்கேற்றும் சிறப்பிக்கலாம். 

ஆய்வுக்கட்டுரைகள் அளிக்க இறுதிநாள்: 15.06.2025 

பேராளர்களின் வசதிகளுக்கு ஏற்பாகப் பேராளர் கட்டணமும் உண்டு. 

 இசைத்தமிழ் மாநாடு குறித்து அறியவும், விளக்கம் பெறவும் விரும்புவோர் கீழ்வரும் தொடர்பு எண்களில் தொடர்புகொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம். 

முனைவர் நா. கிரிஷ்குமார் +91 98941 95962

முனைவர் கி. சிவகௌரி +91 99941 88964

திரு. கி. அறவாழி +65 86260944

முனைவர் இரா. கா. குமார் +91 9443651216

முனைவர் ந. வெங்கடேசன் +91 9442190730 

மின்னஞ்சல்: conference@thamizhisai.net 

இணையம்: https://www.thamizhisai.net/

கருத்துகள் இல்லை: