நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 27 மார்ச், 2018

புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் பிறந்தநாளை முன்னிட்டுத் திருவுருவப் படத்துக்கு மலர் வணக்கம்!


தியாகி அப்துல் மஜீது ஐயா அகவணக்கம் செலுத்துதல் 


     இலங்கையில் பிறந்தவர் விபுலாநந்த அடிகளார். இவர் யாழ்நூல் என்ற தமிழ் ஆராய்ச்சி நூலை எழுதி, உலகப் புகழ்பெற்றவர். இலங்கையில் 27 பள்ளிக்கூடங்களை  நிறுவி, ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்க வழி செய்தவர். இவரின் பிறந்த நாள் மார்ச்சு 27 ஆகும். விபுலாநந்த அடிகளாரின் பிறந்தநாள் புதுச்சேரியில் உள்ள செகா கலைக்கூடத்தில் இன்று(27.03.2018) கொண்டாடப்பட்டது.

     பாவலர்  தியாகி அப்துல் மஜீது அவர்கள் விபுலாநந்த அடிகளாரின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, மலர்தூவி, வணக்கம் செய்தார். முனைவர் மு.இளங்கோவன் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் எடுத்த தம் அனுபவங்களையும், விபுலாநந்தரின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் விபுலாநந்த அடிகளாரின் தமிழ்ப்பணிகளையும் ஆராய்ச்சிப்பணிகளையும், சமூகப் பணிகளையும் நினைவுகூர்ந்தார்.

     தூ. சடகோபன், செ. திருவாசகம், சீனு. தமிழ்நெஞ்சன், சீனு. தமிழ்மணி, வில்லியனூர் வெங்கடேசன், கவிஞர் பைரவி, புலவர் கலியபெருமாள், அ. சந்திரகேசகரன், பெ. வளையாபதி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
முனைவர் மு.இளங்கோவன் அகவணக்கம் செலுத்துதல், அருகில் புதுவைத் தமிழறிஞர்கள்
பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அகவணக்கம் செலுத்துதல்
திரு. செ. திருவாசகம் அகவணக்கம் செலுத்துதல்

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அடிகளாரை பிறந்த நாளில் நினைந்து போற்றும் விதம் அருமை. அகவணக்கம் என்ற சொல்லினை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.