நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

முனைவர் அ. அறிவுநம்பி அவர்களின் நினைவேந்தல் கூட்டம்!




புதுவைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், புதுவைத் திருக்குறள் மன்றத்தின் (புதிமம்) செயலாளருமான முனைவர் . அறிவுநம்பி அவர்கள் 09.04.2017 இல் இயற்கை எய்தியதை முன்னிட்டு, இன்று 25.04.2017 மாலை 6 மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தின் சங்கமித்ரா அரங்கில் நினைவேந்தல் கூட்டம் ஒன்றைப் புதுவைத் திருக்குறள் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

முனைவர் அ. அறிவுநம்பியின் நினைவைத் தாங்கியுள்ள தமிழார்வலர்கள், திருக்குறள் அன்பர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்(து)இவ் வுலகு - திருக்குறள்.

கருத்துகள் இல்லை: