நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 16 மே, 2015

பண்ணாராய்ச்சியாளர் குடந்தை ப. சுந்தரேசனார் உலகத் தமிழர்கள் கொண்டாடப்பட வேண்டிய இசைமேதை! கடலூரில் முனைவர் வி. முத்து உரை!


 முனைவர் வி. முத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட, திரு. மாரிமுத்து அவர்கள் பெற்றுக்கொள்ளும் காட்சி. அருகில் கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள்.

கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கம் சார்பில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் வெளியிடப்பட்டுத் தமிழறிஞர்கள், தமிழுணர்வாளர்கள் முன்னிலையில் இன்று மாலை (16.05.2015) திரையிடப்பட்டது. புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவரும், கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புத் தலைவருமாகிய முனைவர் வி. முத்து அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார். திரு. மாரிமுத்து அவர்கள் ஆவணப்படத்தின் முதல்படியைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.  

பேராசிரியர் இரா.. குழந்தைவேலனார் அறிமுகவுரையாற்றினார். அரங்க. இரகு, புலவர் மு. நாகப்பன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு இந்த ஆவணப்படத்தின் தேவையையும், இந்தப் படம் எடுக்கப்பட்டதற்கான நோக்கத்தையும் எடுத்துரைத்தார்.

திரு. மாரிமுத்து அவர்கள் ஆவணப்படத்தின் கூடுதல்படிகளை வாங்கி, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

புதுச்சேரி, கடலூர் வாழும் தமிழார்வலர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஆவணப்படம் குறித்து ஊடகங்களுக்குத் திரு.முத்து அவர்களின் செவ்வி.

திரு. மாரிமுத்து அவர்களின் உரை

பேராசிரியர் இரா..ச.குழந்தைவேலனார் ஊடகங்களுக்குச் செவ்வியளித்தல்

பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்



பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

1 கருத்து:

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

விழா நிகழ்வுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நாங்களும் உடன் இருப்பதுபோல் இருந்தது.