எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை முதலாவதாக வைத்துப் போற்றப்படும் சிறப்புடையது.இந்நூல் 400 பாடல்களைக்கொண்டது.எனவே நற்றிணை நானூறு எனவும் அழைக்கப்பெறும். ஒன்பது முதல் பன்னிரண்டு அடிகளைக்கொண்ட பாடலடிகளைக் கொண்டது.அகப்பொருள் செய்திகளை இந்நூல் கொண்டிருந்தாலும் கிள்ளி,குட்டுவன், செழியன்,சென்னி முதலான பெருவேந்தர்களையும் ஆஅய்,ஓரி,காரி போன்ற கொடை வள்ளல்களையும் பற்றிய பல செய்திகளைத் தாங்கியுள்ளது.
அன்னி,மிஞிலி,குழிசி,புல்லி,பழையன்,தித்தன்,நன்னன் போன்ற குறுநிலமன்னர்களையும் தழும்பன்,திருமாவுண்ணி,விராஅன்,வீரை போன்ற மறவர்களைப் பற்றியும் பல்வேறு வரலாற்றுத் தகவல்களை இந்நூல் கொண்டுள்ளது.நற்றிணையின் 234 ஆம் பாடல் முழுவதும் கிடைக்கவில்லை(?).385 ஆம் பாடலின் பிற்பகுதி கிடைக்கப்பெறவில்லை.இந்நூலின் 56 பாடல்களின் ஆசிரியர்பெயர் காணப்பெறவில்லை.ஏனைய பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 192 என்பர்.நற்றிணைக்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வரைந்த உரை அறிஞர்களால் போற்றப்படுகிறது.பெருமழைப்புலவரின் உரைக்குறிப்பு பல விளக்கம் தருவன.இந் நூலில் இடம்பெற்றுள்ள புலவர்கள் பற்றிப் பட்டியலிட்டு விரிவாக எழுதி வைத்துள்ளேன்.பின்னர் வழங்குவேன்.
நற்றிணை பாடிய புலவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)




2 comments:
நற்றிணையின் அறிமுகத்திற்கு நன்றிகள் ஐயா.
வாழ்த்துக்கு நன்றி.
Post a Comment