நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 17 நவம்பர், 2007

தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம்

தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் என்னும் பெயரில் ஒடுக்கப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களின்
கலை, இலக்கிய வளர்ச்சிப் பணிகளுக்குத் தமிழ்நாட்டில் புதிய கலை, இலக்கிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.இவ்வமைப்பின் தொடக்கவிழா முறைப்படி தமிழகத்தின் தலைநகரில் விரைவில் நடைபெற உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் கலை, இலக்கியங்களை வளர்த்தல்
இப் படைப்புகளை வழங்கும் படைப்பாசிரியர்களைப் பாராட்டல்,விருதுவழங்கிச் சிறப்பித்தல்,
படைப்பாளர்களை உருவாக்கும் நோக்கில் பயிற்சியளித்தலைச் செய்யத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.இது பற்றிய விவரம் பின்னர் விரிவாகப் பதிவுசெய்வேன்.

கருத்துகள் இல்லை: