நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 மார்ச், 2009

திருச்செங்கோட்டில் தமிழ் இணையப்பயிலரங்கு தொடங்கியது...

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று 14.03.2009 காலை 10 மணிக்குத் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது.பேராசிரியர் கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.முனைவர் இரா.சந்திரசேகரன் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் பேராசிரியர் நா.கண்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.புலவர் செ.இராசு அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.திரு.டி.என்.காளியண்ணன் அவர்களின் திருமகனார் திரு டி.என்.கே இராசேசுவரன் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.
முதல் அமர்வில் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.பிறகு முனவைர் குணசீலன் அவர்கள் வலைப்பூ உருவாக்கம் பற்றி உரையாற்றினார்.

பயிலரங்கிற்குத் திருவாளர்கள் இரவிசங்கர்(விக்கி),இராசசேகர தங்கமணி, செல்வமுரளி, விசயகுமார்(சங்கமம்) உள்ளிட்ட கணிப்பொறி வல்லுநர்கள்,ஆர்வலர்கள் வந்துள்ளனர்.மேலும் நாமக்கல்,கோவை மாவட்டத்தின் பல கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள்,ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அமர்வு தொடங்கியுள்ளது.