நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 6 அக்டோபர், 2020

திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழகக் கல்லூரி மாணவர் கட்டுரைப்போட்டி- 2020 - 2021

 



திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழுக்குப் பணியாற்றி வருகின்றது. கல்லூரி மாணவர்களுக்கு ஐம்பத்தைந்து ஆண்டுகளாக ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டியை நடத்தி, முதல் பரிசு பெறுபவர்களுக்கு ஒரு பவுன் மதிப்புள்ள தங்கப்பதக்கமும், உருவா முப்பதாயிரம் மதிப்புள்ள .பி.சொ. அரிராம் சேட்டு நினைவு வெள்ளிச் சுழற்கோப்பையும் வழங்கி வருகின்றது.

இவ்வாண்டுக்குரிய ஆய்வுப்பொருள்:

 பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்களின் எழுத்தோவியங்கள்

  • தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களும் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.
  • எழுத்துரைகள் 60 பக்கங்களுக்குக் குறையாமலும் எழுபது பக்கங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
  • பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்களின் பன்முகப் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் படைப்புகள் அமைதல் வேண்டும்.
  • ஆய்வுக்கட்டுரையை மாணவர் எழுதியதற்கான சான்றினைக் கல்லூரி முதல்வரிடம் பெற்று இணைத்தல் வேண்டும்.
  • தனித்தாளில் பெயர், முகவரி, தொடர்பு எண் இருத்தல் வேண்டும்.
  • படைப்புகள் 17.12.2020 நாளுக்குள் அனுப்பி வைத்தல் வேண்டும்.

கருத்தோவியங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

முனைவர் பா. வளன் அரசு,

3, நெல்லை நயினார் தெரு, பாளையங்கோட்டை, நெல்லை மாவட்டம் – 627 002.

தொடர்பு எண்: 75983 99967


 

 

கருத்துகள் இல்லை: