நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 10 மார்ச், 2016

தொல்காப்பியம் – தொடர்பொழிவு 2



அன்புடையீர்! வணக்கம்.

  தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியம் தொடர்பொழிவு நடைபெறுகின்றது. தாங்கள் இந்த நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்கவும் தொல்காப்பிய உரையமுதம் பருகவும் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 16. 03. 2016, அறிவன்(புதன்) கிழமை, நேரம்: மாலை 6.30 மணி முதல் 8. 00 மணி வரை

இடம்: செகா கலைக்கூடம், நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

வரவேற்புரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்
 நோக்கவுரை: முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்

தலைமை: பேராசிரியர் கு. சிவமணி அவர்கள்

சிறப்புரை: முனைவர் . செல்லபெருமாள் அவர்கள்,
பேராசிரியர், மானிடவியல்துறை, புதுவைப் பல்கலைக்கழகம்

தலைப்பு: அறிதல்சார் மானிடவியல் நோக்கில் தொல்காப்பியம்

நன்றியுரை: திரு. சுலை.அகமதியன் அவர்கள்


அனைவரும் வருக!

அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்,
புதுச்சேரி – 605 003

தொடர்புகொள்ள:
முனைவர் ப. பத்மநாபன் + 9443658700 / 
முனைவர் மு.இளங்கோவன் + 9442029053

கருத்துகள் இல்லை: