நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 8 ஏப்ரல், 2015

புதுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினிப் பயிலரங்கு


 முனைவர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை

புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் இன்று (08. 04. 2015) ஒருநாள் தமிழ்க்கணினிப் பயிலரங்கு நடைபெற்றது. புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பயிலரங்கத் தொடக்க விழாவுக்குத் தலைமை தாங்கினார். இன்றையத் தொழில்நுட்ப உலகின் மாற்றங்களை எடுத்துக்காட்டிக் கணினியில் தமிழ் வளர்ந்துள்ள முறைகளை விளக்கினார். தமிழ்க்கணினி வளர்ச்சிக்குக் கடந்த ஆண்டு உத்தமம் அமைப்புப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இணைய மாநாட்டை நடத்தியதையும், அதில் உலகின் பலநாடுகளிலிருந்து பேராளர்கள் வருகை தந்து கலந்துகொண்டதையும் துணைவேந்தர் அவர்கள் தம் உரையில் நினைவுகூர்ந்தார். கணினி அறிவு மாணவர்களின் கல்விக்கு எந்த எந்த வகையில் பயன்படும் என்றும் எடுத்துரைத்துச் சிறப்புரையாற்றினார்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்(பொ) முனைவர் சு. பன்னீர்செல்வம் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். தமிழியற்புலத்தின் முதன்மையர் முனைவர் க. இளமதி சானகிராமன்  வரவேற்புரையாற்றினார். 

முனைவர் நா.இளங்கோ, முனைவர் மு.இளங்கோவன், முனைவர் ஏ.எழில்வசந்தன், முனைவர் தி.அன்புச்செல்வன் ஆகியோர் மாணவர்களுக்குக் கணினி, இணையம் குறித்த சிறப்புரைகளை வழங்கினர்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் கல்விப்பிரிவு இயக்குநர் முனைவர் வி.இந்துமதி அவர்கள் கலந்துகொண்டு பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். இப்பயிலரங்கில் புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட இளங்கலையில் தமிழ் பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர்.

பதிவாளர்(பொ) சு. பன்னீர்செல்வம் அவர்களின் உரை



 புலமுதன்மையர் முனைவர் க.இளமதி சானகிராமன் அவர்களின் வரவேற்புரை

துணைவேந்தர் அவர்கள் முனைவர் நா.இளங்கோ அவர்களைச் சிறப்பித்தல்

துணைவேந்தர் அவர்கள் முனைவர் எழில்வசந்தன் அவர்களைச் சிறப்பித்தல்
துணைவேந்தர் அவர்கள் முனைவர் தி. அன்புச்செல்வன் அவர்களைச் சிறப்பித்தல்

துணைவேந்தர் அவர்கள் மு.இளங்கோவனைச் சிறப்பித்தல்

1 கருத்து:

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

விழாவினைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.