



ஊற்றங்கரை வித்தியாமந்திர் கல்லூரியில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று காலை பத்து முப்பது மணியளவில் தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது.ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெற்று வருகின்றனர். பள்ளியின் தாளாளார் திரு.வே.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் திரு.பழ. பிரபு உள்ளிட்ட விடுதலை வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். சென்னையிலிருந்து பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் கலந்து கொண்டு இணையப் பயிலரங்கத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார். புதுவை மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தமிழ் இணைய அறிமுகம் செய்தார். உணவு உடைவேளைக்குப் பிறகு செய்முறைப் பயிற்சி தொடங்க உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக