நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஆராய்ச்சி வித்தகர் கு.திருமேனி அவர்கள்


பேராசிரியர் கு.திருமேனி அவர்கள்

 பேராசிரியர் கு.திருமேனி அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழி வட்டம் தென்னிலக்குடி என்னும் ஊரில் வாழ்ந்த குமாரசாமி என்னும் பெரியார்க்கு மகனாக வாய்த்தவர்.

 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர், பி.ஓ.எல் பட்டங்களையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டத்தையும், கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர்.

 நாடகச்சிலம்பு, கோவலன், பூம்புகார்ப் பொற்றொடி, தென்றமிழ்ப்பாவை, கம்பருக்குக் கதைகொடுத்தவர் வான்மீகரா?, கோவூர்க்கிழார், மனோன்மணியத் திறனாய்வு, வாலி ஒரு திறனாய்வு, சிலம்பணி மகளிர், தூய சிந்தையாள் (கைகேயி) ஆகிய ஆய்வுநூல்களை எழுதியவர். இவரின் நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடநூலாக இருந்த பெருமைக்குரியன.

 திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

 இரண்டாவது உலகத் தமிழ்மாநாட்டிலும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்திலும் கட்டுரை படித்த பெருமைக்கு உரியவர்.

 ஆராய்ச்சிச்செல்வர், கம்பராமாயண வித்தகர் போன்ற பட்டங்களைப் பெற்றவர். திருச்சிராப்பள்ளி செண்பகத் தமிழரங்கில் இவர் ஆற்றிய பேருரைகள் ஒலிப்பதிவில் பாதுகாக்கப்படுகின்றன. சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயணத்திலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வகையில் புலமை பெற்றவர் என்று அறிஞர் உலகு இவரின் புலமையைப் போற்றும். தமிழ் ஆங்கில மொழிகளில் வல்லார் என்று புலமையாளர் போற்றுவர்.

நன்றி: செண்பகத் தமிழ்க்கோவை

2 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

Good post

rajamelaiyur சொன்னது…

I am also near Sirkali