நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 29 அக்டோபர், 2007

திருமுதுகுன்றத்திலிருந்து கருப்புச்சொற்கள்...

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) இலக்கியப் படைப்பாளிகள் பலரை வழங்கியமண். இவ்வூரிலும் அண்டை, அயலில் உள்ள ஊர்களிலும் பிறந்த பல படைப்பாளிகள் தமிழ் இலக்கிய உலகிற்குப் பல படைப்புகளை வழங்கியுள்ளனர். இப்பகுதியில் பிறந்த திரைப்பா ஆசிரியர் அறிவுமதியின் எழுத்துகளும் வளர்ச்சியும் இப்பகுதி இளைஞர்களைக் கவிஞர்களாகவும், கதையாசிரியர்களாகவும், சிற்றிதழாசிரியர்களாகவும் மாற்றின எனக் குறிப்பிட்டால் மிகைக்கூற்றாக இருக்காது.

கண்மணி குணசேகரன், இரத்தின.கரிகாலன், இரத்தின.புகழேந்தி, பட்டிசெங்குட்டுவன், தெய்வசிகாமணி (நடவு ஆசிரியர்), தாமரைச்செல்வி (புதின ஆசிரியர்) முதலானவர்கள் இப்பகுதியின் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

பல்லடம் மாணிக்கம், த.பழமலை. வே.சபாநாயகம், தங்கர்பச்சான் போன்றவர்களும் இளைஞர்களை எழுதச்செய்யும் இயல்புடையவர்கள். இவர்கள் இப்பகுதியினர்.

இம்மண்ணிலிருந்து ஆவாரம்பூ என்னும் பெயரில் சிவா என்னும் இளைஞர் தரமான சிற்றிதழ் தொடங்கி நடத்தினார். மூன்று இதழ்கள் வெளிவந்த பிறகு தமிழ்ப்பற்றின் காரணமாகச் சிவா என்னும் தம் பெயரை இளந்திரையன் என மாற்றியும், ஆவாரம்பூவைக் 'கருப்புச்சொற்கள்' என்னும் பெயரிலும் வெளியிட்டுள்ளார். தரமான படைப்புகளுடன் கருப்புச்சொற்கள் இதழை வெளிக்கொண்டுவந்துள்ள இளந்திரையனைப் போற்றி வரவேற்போம்.

அவர்தம் முகவரி:

இளந்திரையன்
470/ 1 பாரிவீதி,
பாலாசிநகர்,பெரியார் நகர்(தெற்கு),
திருமுதுகுன்றம் -606001,தமிழ்நாடு

கருத்துகள் இல்லை: