நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 29 மார்ச், 2007

பாவேந்தர் பாரதிதாசனின் பல்திறப் படைப்பாளுமை - கருத்தரங்கம்

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் உயராய்வு மையம் பாவேந்தர் பாரதிதாசனின் பல்திறப் படைப்பாளுமை என்னும் கருத்தரங்கை 2007 மார்ச்சுத் திங்கள் 26, 27 நாள்களில் நடத்தியது.
துணைவேந்தர் முனைவர் சி.தங்கமுத்து அவர்கள் தலைமை உரையாற்றினார். முனைவர்ச.சு.இராமர் இளங்கோ வரவேற்றார். முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் தொடக்கவுரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன், முனைவர் மு.இளமுருகன், அரிமளம் பத்மநாபன், முனைவர் மு.திருஞானமூர்த்தி, முனைவர் மெய்கண்டான், திருவாட்டிசெ.மகேசுவரி, முனைவர்.ந.சக்திவேலு, முனைவர் இரா.சக்குபாய், முனைவர் ய.மணிகண்டன், முனைவர் சாயபுமரைக்காயர், புலவர்ச.சுப்பிரமணியன், முனைவர் கு.திருமாறன், முனைவர் செயலாபதி, முனைவர் செல்வகணபதி உள்ளிட்ட அறிஞர்கள் ஆய்வுக் கட்டுரைவழங்கினர். முனைவர் த.கனகசபை, முனைவர் மார்க்கரெட் பாஸ்டின், முனைவர் ந.மணிமேகலை, முனைவர் க.கனகராசு, முனைவர் அந்தோனிகுருசு, முனைவர் பீ.மு.மன்சூர் உள்ளிட்டோர் அமர்வுத் தலைமை தாங்கினர்.
நிறைவில் முனைவர் கா.செல்லப்பனாரின் சிறப்புரை அமைந்தது. பாவேந்தர் பாரதிதாசனின் பாட்டுத்திறமையையும் பல துறை ஆளுமையையும் அறிஞர்கள் வெளிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை: