நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழிசை விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழிசை விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 டிசம்பர், 2015

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் வழங்கும் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா


 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Fetna) அமெரிக்காவில் தமிழ்க் காப்புப் பணிகள் பலவற்றைச் செய்து வருகின்றது. இந்த அமைப்பு தாயகமாம் தமிழகத்தில் தமிழிசைப் பணியை முன்னெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவை நடத்த முன்வந்துள்ளது. சென்னையில் உள்ள இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11 ஆம் ஆண்டு விழாவில்  3 ஆம் ஆண்டு தமிழிசை விழாவினை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. தமிழிசை ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தாங்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

நாளும் இடமும்

நாள் : 29.12.2015 செவ்வாய்க்கிழமை

இடம்: ஆனந்த் சந்திரசேகர் அரங்கம் A/C      

எண்: 56, தம்பையா சாலை, மேற்கு மாம்பலம், சென்னை -600 033
(மாம்பலம் இரயில் நிலையம் & அயோத்தியா மண்டபம் அருகில்)
              
நிகழ்ச்சி நிரல்

பிற்பகல் 2.00 மணி - தொடக்க விழா

விழாவினைத் தொடங்கி வைத்தல்:
உயர்திரு. கருப்பையா சிவராமன் அவர்கள்
மேனாள் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

தமிழ் வாழ்த்து : இசைத்தென்றால். ஹிரண்யா சிங்கப்பூர்

பிற்பகல் 2.15 முதல் 3.30 மணி வரை
பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும்
கல்லூரி மாணவ-மாணவிகள் வழங்கும் தமிழிசை

மதியம் 3.30 மணி முதல் 4.00 மணி வரை
கலைமாமணி இந்திரா ராஜன்  வழங்கும் தமிழர் அடையாளம் நாட்டியம்

மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை
பாவேந்தர் பாடல்கள் இசை அரங்கு
வழங்குபவர்: 
தமிழிசை வேந்தர் முனைவர் அரிமளம் சு. பத்மநாபன் அவர்கள்    

மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
லக்ஷ்மி மில்ஸ் விவேகானந்தர் சேவா சங்கக் கலைக்குழுவினரின்
கும்மி ஆட்டம்.

மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை
தமிழ் வாழ்த்து :  செல்வன் அரவிந்தன்

வரவேற்புரை :
உயர்திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள்
தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.

தலைமை :
முனைவர் V.G. தேவ் அவர்கள்
மேனாள் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

முன்னிலை :
எழுத்தாளர். உயர்திரு.  மாம்பலம் ஆ. சந்திரசேகர் அவர்கள்

சிறப்பு விருந்தினர்கள் :
உயர்திரு. முனைவர் G. விசுவநாதன் அவர்கள்
வேந்தர், VIT பல்கலைக்கழகம்

உயர்திரு. முனைவர் க. பாஸ்கரன் அவர்கள்
துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்

உயர்திரு செ. இராஜேந்திரன் I.A.S. அவர்கள்
வேளாண்மைத்துறை தலைமைச் செயலகம், சென்னை

உயர்திரு. K. அய்யனார் அவர்கள்
மண்டல இயக்குனர், இந்தியப் பண்பாட்டு உறவு நிறுவனம் (ICCR)

திரைப்பட, குறும்பட விருது வழங்குபவர் :
உயர்திரு. முனைவர் வி.ஜி. சந்தோசம் அவர்கள்
வி.ஜி.பி. நிறுவனங்கள்

வாழ்த்துரை :
முனைவர். மு. இளங்கோவன் அவர்கள்
புதுச்சேரி

சான்றிதழ் வழங்குபவர் :
உயர்திரு. K.P.K.செல்வராஜ் அவர்கள்
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்

நிகழ்ச்சித் தொகுப்பு :
உயர்திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள் 
மக்கள் தொடர்புக்குழு ஒருங்கிணைப்பாளர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

நன்றியுரை :
உயர்திரு. திருபுவனம். G. ஆத்மநாதன் அவர்கள்
நிறுவனர், அறங்காவலர் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை

மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
மாணவர் அரங்கம் வழங்கும்
வெளிச்சத்திற்குப் பின்னால் - நாடகம்
இயக்கம் - பேராசிரியர் R. இராஜூ அவர்கள்
நிகழ் கலைத்துறை, புதுவைப் பல்கலைக் கழகம் - புதுச்சேரி


புதன், 25 டிசம்பர், 2013

சென்னையில் 2013 - தமிழிசை விழாவும் மாவீரன் தீரன் சின்னமலை நாட்டிய நாடகமும்




அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இயங்கும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FETNA)”, தமிழகத்தில் இயங்கும் "இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையுடன் இணைந்து முதன்முறையாகச் சென்னையில் 2013, திசம்பர் 29 ம் நாள் ஞாயிற்றுக் கிழமை, மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ‘2013 - தமிழிசை விழாஎன்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.

நாள்: 29.12.2013, ஞாயிறு மாலை 4 முதல் 9 மணி வரை
இடம்: பசும்பொன் தேவர் மண்டபம்
100, பிபுல்லா சாலை, தியாகராயர் நகர்,
சென்னை 600 017.

              “2013 - தமிழிசை விழா​”​வில், ஞாயிறு மாலை 4:00 மணி முதல் 6:00 மணிவரை பாடகி சுசித்ரா பாலசுப்ரமணியம் அவர்கள் புறநானூற்றுப் பாடல்களையும், பாடகி அனுராதா கிருட்டிணமூர்த்தி அவர்கள் தமிழிசைப் பாடல்களையும் பாட இருக்கிறார்கள்.

மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை சிறப்பு விருந்தினர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையைச் சேர்ந்த முனைவர் சுந்தரவடிவேல் வரவேற்புரை நிகழ்த்த, மதுரை மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மருத்துவர் என்.சேதுராமன் அவர்கள் தலைமையேற்க இருக்கிறார்கள்.

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. கே.பி.கே. செல்வராசு அவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். GEM தொழிற்குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் திரு ஆர். வீரமணி அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

 வேலூர் வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தின் நிறுவனர் கல்வியாளர் கோ.விசுவநாதன் அவர்கள், கூட்டுறவுத் துணி இயக்ககத்தின்(கோ ஆப்டெக்சு) மேலாண் இயக்குநர் திரு.சகாயம் இ.ஆ.ப, VGP நிறுவனத்தின் தலைவர்  திரு.V.G. சந்தோசம் ஆகியோர் சிறப்புரை ஆற்றவும் இருக்கிறார்கள்.

தமிழிசை விழாவின் முதன்மை நிகழ்வாக நடராஜ் நாட்டிய வித்யாலயாவழங்கும் மாவீரன் தீரன் சின்னமலை நாட்டிய நாடகம்அரங்கேற இருகிறது. 

நாட்டியம்: குரு: நாகை. என். பாலகுமார்; பாடல்கள்: கவிமுகில் கோபாலகிருட்டிணன்.

நிகழ்ச்சியின் நிறைவில், இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த இன்னிசை ஏந்தல்திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் ன்றியுரை நிகழ்த்துவார்கள். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையைச் சேர்ந்த திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்கள்.


தமிழிசை விழாவைக் கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவில் நடத்திவரும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை”, முதன்முதலாக அமெரிக்காவிற்கு வெளியே தாய்த்தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் தமிழர்கள் வாழ்கின்ற உலகின் மற்ற பகுதிகளிலும் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற வேண்டும் ​ எனப் பேரவை விரும்புகிறது. தமிழிசையைப் பருகவும் தமிழ்நாடகம் காணவும் தமிழக உறவுகளை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை அன்புடன் அழைக்கின்றது.
தொடர்புக்கு:
இன்னிசை ஏந்தல் திருபுவனம் கு. ஆத்மநாதன் அவர்கள்,
என் 6, என் தெரு, கீழ்ப்பாக்கம் கார்டன்,
சென்னை – 600 010
தொலைபேசி(இல்லம்) : 00 91 44 6545 5989

செல்பேசி: 00 91 93801 25989