நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
பெரியார்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 டிசம்பர், 2010

கோவையில் தமிழ் இணையப் பயிலரங்கம்

கோவை பெரியார்களம் அமைப்பின் சார்பில் 26.12.2010 காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுகின்றது.

இடம்: கல்வியகம், கோவை.

வசந்தம் கு.இராமச்சந்திரன் தலைமையில் தொடக்க விழா நடைபெறுகின்றது. ம.சந்திரசேகர் வரவற்புரையாற்றுகின்றார். ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அறிமுகவுரையாற்றுகின்றார்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணையம் குறித்த பயிற்சியை வழங்குகின்றார்.

சு.வேலுசாமி நன்றியுரையாற்றுகின்றார்.

தொடர்புக்கு: 94442 10999 , 98943 65302