நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
பா. வளன் அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா. வளன் அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஆகஸ்ட், 2016

திருக்குறள்- புதிய பதிப்பு






திருக்குறள் நூல் அறிஞர்களால் காலந்தோறும் சிறப்பாகப் பதிப்பிக்கப்பெற்று, உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. கனடாவில் வாழும் திரு. சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் தம் மகள் சி. ஆர்த்திமருமகன் . பிரசாத் ஆகியோரின் திருமணநாளில் (20.08.2016) திருக்குறளுக்குப் புதிய பதிப்பு ஒன்றை வெளியிடுகின்றார். மணவிழாவுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்குக் கையுறைப் பொருளாகத் திருக்குறள் நூல் வழங்கப்பட உள்ளது. 464 பக்கம் கொண்ட இத்திருக்குறள் பதிப்பில் திருக்குறள் மூலம், முனைவர் பா. வளன் அரசு உரை, தவத்திரு போப் அடிகளாரின் ஆங்கில மொழிபெயர்ப்பு, தவத்திரு டுரூ, இலாசரசு ஆகியோரின் ஆங்கில விளக்கம் ஆகியன அமைந்துள்ளன. தமிழர்களின் இல்லந்தோறும் இருக்க வேண்டிய இந்த நூல் தமிழறியாத பிறமொழியினரும் பயன்படுத்தும் வகையில் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஆங்கில விளக்கத்துடன் பதிப்பிக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

திருக்குறள் பதிப்பு விவரம்
திருக்குறள்  - ஆசிரியர்: திருவள்ளுவர்
உரை - முனைவர் பா.வளன் அரசு
ஆங்கில மொழிபெயர்ப்பு: தவத்திரு. போப் அடிகளார்
ஆங்கில விளக்கம்: தவத்திரு. டுரூ, இலாசரசு

பதிப்பாசிரியர்கள்:
சிவம் வேலுப்பிள்ளை
மு.இளங்கோவன்
விலை: உருவா 250
பக்கம்: 464