சந்தனக்காடு என்னும் பெயரில் வீரப்பன் வாழ்க்கையும் அதிரடிப்படையினரின் செயல்பாடுகளும் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. உலகத் தமிழர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இத்தொடர் 171 நாள் வெற்றியாக ஒளிபரப்பப்பட்டது. இதன் வெற்றிவிழா சென்னை இராயப்பேட்டை மியூசிக் அகாதெமியில் 16.07.2008 மாலை தொடங்கியது.
திருமானூர் குமார் குழுவினரின் தப்பாட்டத்துடன் விழா தொடங்கியது. அடுத்து சந்தனக்காடு தொடரில் இடம்பெறும் பாடலைத் தாய்த்தமிழ்ப் பள்ளி மழலையர்கள் பாடி மகிழ்ச்சியூட்டினர்.
மக்கள் தொலைக்காட்சியைச் சார்ந்த திரு.கார்மல் அனைவரையும் வரவேற்றார்.
சந்தனக்காடு உருவான கதை திரையிடப்பட்டது. இயக்குநர் மகேந்திரன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். திரைத்துறையைச் சேர்ந்த கலைப்புலி தாணு, சீமான், பாலு மகேந்திரா, திருச்செல்வம், சமுத்திரக்கனி, பாலாசி சக்திவேல், ஓவியர் வீரசந்தனம், பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், காசி ஆனந்தன், கண்மணி குணசேகரன், இராசேந்திர சோழன், புட்பவனம் குப்புசாமி உள்ளிட்டவர்கள் உரையாற்றினர். மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் கலந்துகொண்டு கலைஞர்களுக்குப் பரிசு வழங்கி நிறைவுப் பேருரையாற்றினார். தயாரிப்பாளர் உலகரட்சகன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
கவிஞர் செயபாசுகரன், முனைவர் திருப்பூர் கிருட்டிணன், கி.த.பச்சையப்பன், திரு. கிருட்டிணசாமி, அனிதா குப்புசாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் நிறைவுரை
தாய்த் தமிழ்ப்பள்ளி மழலைகள் பாடலிசைத்தல்
பறையாட்டம்
புட்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி
கராத்தே இராசா பரிசுபெறல்
சீமான் உரை
திருச்செல்வம் உரை
பாலு மகேந்திரா உரை
பாலாசி சக்திவேல் உரை
நடிகை தீபிகாவுக்குப் பாராட்டு
இயக்குநர் வ.கெளதமன் சிறப்பிக்கப்படுதல்
இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்குப் பரிசளிப்பு
முனைவர் திருப்பூர் கிருட்டிணன், செயபாசுகரன், வீரசந்தனம்