நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
சந்தனக்காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்தனக்காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஜூலை, 2008

சந்தனக்காடு வெற்றிவிழாப் படங்கள்...

 சந்தனக்காடு என்னும் பெயரில் வீரப்பன் வாழ்க்கையும் அதிரடிப்படையினரின் செயல்பாடுகளும் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. உலகத் தமிழர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இத்தொடர் 171 நாள் வெற்றியாக ஒளிபரப்பப்பட்டது. இதன் வெற்றிவிழா சென்னை இராயப்பேட்டை மியூசிக் அகாதெமியில் 16.07.2008 மாலை தொடங்கியது.

 திருமானூர் குமார் குழுவினரின் தப்பாட்டத்துடன் விழா தொடங்கியது. அடுத்து சந்தனக்காடு தொடரில் இடம்பெறும் பாடலைத் தாய்த்தமிழ்ப் பள்ளி மழலையர்கள் பாடி மகிழ்ச்சியூட்டினர்.

 மக்கள் தொலைக்காட்சியைச் சார்ந்த திரு.கார்மல் அனைவரையும் வரவேற்றார்.

 சந்தனக்காடு உருவான கதை திரையிடப்பட்டது. இயக்குநர் மகேந்திரன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். திரைத்துறையைச் சேர்ந்த கலைப்புலி தாணு, சீமான், பாலு மகேந்திரா, திருச்செல்வம், சமுத்திரக்கனி, பாலாசி சக்திவேல், ஓவியர் வீரசந்தனம், பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், காசி ஆனந்தன், கண்மணி குணசேகரன், இராசேந்திர சோழன், புட்பவனம் குப்புசாமி உள்ளிட்டவர்கள் உரையாற்றினர். மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் கலந்துகொண்டு கலைஞர்களுக்குப் பரிசு வழங்கி நிறைவுப் பேருரையாற்றினார். தயாரிப்பாளர் உலகரட்சகன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

 கவிஞர் செயபாசுகரன், முனைவர் திருப்பூர் கிருட்டிணன், கி.த.பச்சையப்பன், திரு. கிருட்டிணசாமி, அனிதா குப்புசாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.



மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் நிறைவுரை


தாய்த் தமிழ்ப்பள்ளி மழலைகள் பாடலிசைத்தல்


பறையாட்டம்


புட்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி


கராத்தே இராசா பரிசுபெறல்


சீமான் உரை


திருச்செல்வம் உரை


பாலு மகேந்திரா உரை


பாலாசி சக்திவேல் உரை


நடிகை தீபிகாவுக்குப் பாராட்டு


இயக்குநர் வ.கெளதமன் சிறப்பிக்கப்படுதல்


இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்குப் பரிசளிப்பு


முனைவர் திருப்பூர் கிருட்டிணன், செயபாசுகரன், வீரசந்தனம்

வெள்ளி, 11 ஜூலை, 2008

சந்தனக்காடு இயக்குநர் வ.கெளதமன் எங்கள் இல்லத்தில்....

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக்காடு தொடரின் இயக்குநர் திரு.வ.கெளதமன் அவர்கள் எங்கள் அன்பான அழைப்பை ஏற்று இன்று(11.07.2008) மாலை எங்கள் புதுச்சேரி இல்லத்திற்கு வந்தார்கள்.சந்தனக்காடு தொடரின் வெற்றி விழா அழைப்பினை வழங்கி எங்களை நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைத்தமை வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வாகும்.

எங்கள் உரையாடலின் பொழுது 'திரட்டி' உருவாக்குநர் திரு வெங்கடேசு அவர்களும் உடனிருந்தார். நாட்டுப்புறப்பபாடல்கள் பல பாடி எங்கள் ஊரின் பாடல்களை இயக்குநருக்கு அறிமுகம் செய்தேன். மண்ணின் மணம் விரும்பும் இயக்குநர் அவர்கள் என் பாடல்களை ஆர்வமுடன் கேட்டு ஊக்கப்படுத்தினார்.அவர்களின் திரைத்துறை முயற்சிகள் பற்றியும் பல்வேறு திரைப்பட உருவாக்கம்,இலக்கிய முயற்சிகள் பற்றியும் உரையாடினோம்.
இணைய நண்பர்களுக்காக அழைப்பிதழைப் பார்வைக்கு வைத்துள்ளேன்.