தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு, 2012, திசம்பர் 15,16 நாள்களில் சென்னை - கிண்டியிலுள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா விடுதியில் நடைபெற உள்ளது. தமிழறிஞர்கள், ஆசிரியர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
மாநாட்டு ஆய்வுக்கருப்பொருள்: "தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் எதிர்காலச் சவால்கள்"
தலைப்புகள்
1. தமிழ் மொழி கற்றல் கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறைகள்
2. தமிழ் மொழி பாடப்பொருள் - காலத்திற்கேற்றவை
3. மனனம் செய்து கற்றல் மூலம் விளையும் பயன்கள்
4. தமிழ் மொழியின் எதிர்காலம்
5. ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்க்கின்றனவா?
6. தமிழை இரண்டாம் மொழியாகப் பயிலும் தமிழ் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் வழிமுறைகள்
7. பிற மொழி மாணவர்கள் தமிழை எளிமையாகக் கற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள்
8. தமிழ் மொழித்திறன் வளர்ப்பு - வழிவகைகள்
9. தமிழ் வளர்த்த அறிஞர்கள்
10. ஆசிரியப்பணி அறப்பணி
கட்டுரைகள் 20 நிமிடங்களுக்குள் வழங்கும் வண்ணம் அமைதல் வேண்டும்.
முழு வடிவில் கட்டுரைகள் அனுப்ப இறுதி நாள் : 30/08/2012
பேராளர் கட்டணம் : ரூ.5000/-
கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி:
ந. ரெங்கராஜன்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
78, பெல்சு சாலை,
சென்னை - 600005.
பேசி : 044-28510575
செல்பேசி எண்கள்: 0091 94431 89525 / 0091 80125 22222
மின்னஞ்சல் : testf@asiriyarkoottani.org
இணையதளம் : www.tamilkalam.in
உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 4 ஜூலை, 2012
புதன், 15 டிசம்பர், 2010
உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு
சென்னையில் உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 16,17-12.2010 ஆகிய இருநாள்களில் நடைபெறுகின்றது.
சென்னை லீ இராயல் மெரிடியன் உணவகம் அரங்கில் சொ.சகாதேவன் தலைமையில் தொடக்க விழா நடைபெறுகின்றது.
அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மாநாட்டு ஒருங்கிணைப் பாளருமான சு. ஈசுவரன் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.
மாநாட்டு அறிக்கையினை ந.அரங்கராசன் வழங்க, மாநாட்டின் நோக்கங்களை முனைவர் இரா. இளவரசு எடுத்துரைத்து உரையாற்றுவார்.
முன்னைப் பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் பரமசிவம் அவர்கள் குத்துவிளக்கேற்றி உரையாற்றுகின்றார். சென்னைப் பல்கலைக்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் மாநாட்டு மலரினை வெளியிட்டுத் தொடக்கவுரையாற்றுகின்றார். பாவலர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் மாநாட்டுச் சிறப்புரையாற்றுகின்றார்.
மூர்த்தி அவர்களின் நன்றியுரையுடன் தொடக்க விழா நிறைவுறும். அதன் பிறகு அறிஞர்கள் ஆய்வுக்கட்டுரை வழங்குவர்.
17.12.2010 மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். தொடக்கக்கல்வி இயக்குநர் ப. மணி அவர்கள் அன்னை பெரி.கனரஞ்சிதம் நினைவு விருது வழங்கி நிறைவுரையாற்றுகின்றார்.
சென்னை லீ இராயல் மெரிடியன் உணவகம் அரங்கில் சொ.சகாதேவன் தலைமையில் தொடக்க விழா நடைபெறுகின்றது.
அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மாநாட்டு ஒருங்கிணைப் பாளருமான சு. ஈசுவரன் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.
மாநாட்டு அறிக்கையினை ந.அரங்கராசன் வழங்க, மாநாட்டின் நோக்கங்களை முனைவர் இரா. இளவரசு எடுத்துரைத்து உரையாற்றுவார்.
முன்னைப் பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் பரமசிவம் அவர்கள் குத்துவிளக்கேற்றி உரையாற்றுகின்றார். சென்னைப் பல்கலைக்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் மாநாட்டு மலரினை வெளியிட்டுத் தொடக்கவுரையாற்றுகின்றார். பாவலர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் மாநாட்டுச் சிறப்புரையாற்றுகின்றார்.
மூர்த்தி அவர்களின் நன்றியுரையுடன் தொடக்க விழா நிறைவுறும். அதன் பிறகு அறிஞர்கள் ஆய்வுக்கட்டுரை வழங்குவர்.
17.12.2010 மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். தொடக்கக்கல்வி இயக்குநர் ப. மணி அவர்கள் அன்னை பெரி.கனரஞ்சிதம் நினைவு விருது வழங்கி நிறைவுரையாற்றுகின்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)