
எம்.எசு.ஆறுமுக நாயகர்
புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் எம்.எசு.ஆறுமுக நாயகர்(வயது91) அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாகப் புதுச்சேரியில் உள்ள அவர் இல்லத்தில் இன்று(31.10.2011) காலை 9 மணிக்கு இயற்கை எய்தினார். எம்.எசு. ஆறுமுகநாயகர் அவர்களின் இறுதி ஊர்வலம் புதுச்சேரி, இலாசுப்பேட்டை முதன்மைச்சாலையில் உள்ள அவர் இல்லத்திலிருந்து 01.11.2011(செவ்வாய்க்கிழமை) காலை ஆறு மணிக்குப் புறப்பட உள்ளது. அவருக்கு முனைவர் ஆ. வெங்கடசுப்பு ராய நாயகர்(பிரஞ்சு பேராசிரியர் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்) என்னும் ஒரு மகன் உள்ளார். தொடர்புக்கு: + 91 9944064656