வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கமும், சென்னை செம்மூதாய்ப் பதிப்பகமும் இணைந்து நடத்தும் பாரதி பன்னாட்டுக் கருத்தங்கம் எதிர்வரும் மே மாதம் வேலூர் மாவட்டம் ஏலகிரியில் நடைபெற உள்ளது. பாரதியார் படைப்புகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
கட்டுரை அனுப்ப இறுதிநாள்: 15.04.2012
தொடர்புக்கு”
முனைவர் ப.சிவராஜி, இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி
9095831291
முனைவர் சு.சதாசிவம்
9444200369
பேராளர் கட்டணம்:
பேராசிரியர், இலக்கிய ஆர்வலர் உருவா 500-00
ஆய்வாளர் உருவா 400-00
கட்டுரைகள் அனுப்பவேண்டிய முகவரி:
செம்மூதாய்ப் பதிப்பகம்
எண் 17, தாகூர் தெரு, எம் எம். டி. ஏ. நகர்
சிட்லபாக்கம், சென்னை 600 064
செல்பேசி: 9444200369
பாரதியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 18 மார்ச், 2012
ஞாயிறு, 11 டிசம்பர், 2011
புதுச்சேரியில் பாரதியார் பிறந்தநாள் விழா
குமரி அனந்தன் அவர்கள் பாரதியார் படத்திற்குச் சிறப்புச்செய்தல்
படம் உதவி: பாபு(புதுச்சேரி)
புதுச்சேரியில் பாரதியார் பிறந்தநாள் விழா இன்று (11.12.2011) காலை பத்து மணியளவில் புதுவை,ஈசுவரன்கோயில் வீதியில் அமைந்துள்ள அவர்தம் நினைவு இல்லத்தில் புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது.
புதுவை சட்டப்பேரவைத் தலைவர் சபாபதி அவர்கள் கலந்துகொண்டு பாரதியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் புதுவை அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சர் குரு.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் க.இலட்சுமி நாராயணன், திரு.குமரிஅனந்தன் அவர்கள் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், தமிழறிஞர்கள், பாரதி அன்பர்கள் கலந்துகொண்டு பாரதியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

சட்டப்பேரவைத் தலைவர் சபாபதி, அமைச்சர் குரு.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள்

அமைச்சர் குரு.பன்னீர்செல்வம், ச.ம.உ. க.இலட்சுமி நாராயணன் ஆகியோர்

ஒப்பனை செய்யப்பெற்றுள்ள பாரதியார் படம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)