நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழியக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழியக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 பிப்ரவரி, 2017

தனித்தமிழ் மறவர் முனைவர் ந. அரணமுறுவல்




முனைவர்  . அரணமுறுவல்

தமிழ்மொழி வளர்ச்சிக்கு உழைத்த மறவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. தங்களின் வாய்ப்பு வசதிகளுக்கு ஏற்ப எழுதியும், பேசியும், இயங்கியும் தம்மால் இயன்ற உழைப்பை நல்கிய அனைத்துப் பெருமக்களும் தமிழக வரலாற்றில் நன்றியுடன் நினைவுகூரப்படவேண்டியவர்களே. இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஆங்கில வல்லாண்மை எதிர்ப்புப் போர், தனித்தமிழ் இயக்கம், தமிழ்வழிக் கல்வி இயக்கம், ஈழ விடுதலைப் போராட்டம் உள்ளிட்ட தமிழ் - தமிழர் காப்பு முயற்சியில் பங்கேற்றுப் பணியாற்றிய பல்லாயிரக் கணக்கானவர்களின் முயற்சிகள் அறியப்படாமல் உள்ளமை நம் போகூழ் என்றே குறிப்பிட வேண்டும். அவ்வகையில் தனித்தமிழ்த் தொண்டராகப் பணியாற்றிய முனைவர் ந. அரணமுறுவல் அவர்களின் பணியும் பங்களிப்பும் பதிவுறாமல் உள்ளமையை நினைந்து, கவன்று, கிடைத்த குறிப்புகளைப் பதிந்துவைக்கின்றேன்.

முனைவர் . அரணமுறுவல் கல்லக்குறிச்சி வட்டத்தில் மணிமுத்தாற்றங்கரையில் உள்ள  நயினார்பாளையம் என்ற ஊரில் 20.10.1949 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் நல்லான்பிள்ளை, செல்லம்மாள் ஆவர். ந. அரணமுறுவலின் இயற்பெயர் நாராயணன் என்பதாகும். அரணமுறுவல் தலைச்சன்பிள்ளை. இவருடன் நான்கு ஆண்பிள்ளைகளும், ஒரு பெண்பிள்ளையும் உடன் பிறந்தவர் ஆவர். பள்ளிப் படிப்பைத் திண்ணைப் பள்ளியில் தொடங்கியவர். நாராயாணசாமி பிள்ளை என்பவர் இவரின் பள்ளி ஆசிரியர். தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் நேரடியாகச் சேர்ந்தவர். சிறுபாக்கம் உயர்நிலைப்பள்ளியில் இவரின் பள்ளிக்கல்வி அமைந்தது.

இவரின் மாமா திரு. அண்டிரன் அவர்கள் வழியாகத் தமிழறிவும், கல்வியறிவும் பெற்றவர். அண்டிரன் அவர்களே இவரை அரணமுறுவலாக வளர்த்தெடுத்தவர். 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபாடு கொண்டவராக அரணமுறுவல் விளங்கியவர். ஊரில் இளந்தமிழர் கழகம் நிறுவி உழைத்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பில் சேர்ந்து பயின்றவர். பின்னர் பி.ஓ.எல். என்ற பட்டப்படிப்பையும் (1967- 1970) அங்குப் பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவருக்குத் திராவிடர் கழகத் தொடர்பும், தனித்தமிழ் இயக்கத் தொடர்பும் அமைந்தன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபொழுது தென்மொழி ஏட்டின் தொடர்பு கிடைத்ததும் தனித்தமிழ் இயக்க ஈடுபாட்டினரானார். உலகத் தமிழ்க் கழகத்தின் தென்னார்க்காடு மாவட்ட அமைப்பாளராகவும், பின்னர் கல்லக்குறிச்சி வட்டத்தின் அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.

கண்ணம்மா என்ற பெண்ணை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றவர். கடலூர் தென்மொழி அலுவலகத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தலைமையில்  04.06.1971 இல் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு நீலமலை குன்னூர் வள்ளுவர் தமிழ்க் கல்லூரியில் ஓராண்டு பணியாற்றியுள்ளார். முதல்மகள் இறைமொழி 03.04.1972 இல் பிறப்பு. இரண்டாவதாக மகன் அறிவுக்கனல் பிறப்பு.

பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இதழ்ப்பணியிலும், அச்சுப்பணியிலும் துணைநின்றவர். தமிழியக்கம், முதன்மொழி என்று பல்வேறு இதழ்களைப் பின்னாளில் நடத்தியவர்.

பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் மோகனூர் சுப்பிரமணியம் கல்லூரியில் ஓராண்டு பணியாற்றியுள்ளார். பின்னர்த் திருப்பத்தூர்க் கல்லூரியிலும் பணியாற்றினார். தேவநேயச்சித்திரனுடன் இணைந்து தமிழத்தார் என்ற இயக்கம் உருவாக்கி, உழைத்தவர்.

1978 இல் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்னர்ப் பகுதி நேரமாக இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டங்களைப் பெற்றவர். 1978 இல் விடிவெள்ளி (மானிங்ஸ்டார்) மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. 1983 வரை இப்பள்ளியில் பணியாற்றினார்.

   ஆழ்வார்பேட்டையில் தங்கியிருந்தபொழுது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பில் இருந்தார். செந்தில்நாதனுடன் இணைந்து சிகரம் இதழ்ப்பணியில் துணையிருந்தவர். தினப்புரட்சி ஏட்டிலும், மக்கள் முரசு ஏட்டிலும் பணிபுரிந்தவர். கிரியா தற்கால அகராதி வெளிவரும் பணியிலும் துணைநின்றுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு மலர்ப்பணியில் பெரும்பங்கு வகித்தவர். புலமை இதழ் வெளிவருவதற்கும் துணைநின்றுள்ளார். ’பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் இலக்கிய ஆய்வுமுறை’ என்ற தலைப்பில் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் மேற்பார்வையில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

1978 இல்  தமிழக ஈழ நட்புறவுக்கழகம் தொடங்கப்பட்டு, பேராசிரியர் இரா. இளவரசு தலைவராகவும், முனைவர் ந. அரணமுறுவல் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டனர். ஈழத்தமிழர் விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் முதல் அமைப்பாக இது தமிழகத்தில் செயல்பட்டுள்ளது. பல்வேறு நூல்களை அச்சிடவும், இதழ்களை வெளியிடவும் அரணமுறுவல் துணைநின்றுள்ளார். மக்கள் செய்தி என்ற இதழில் மெய்ப்புத் திருத்துநராகவும் அரணமுறுவல் பணிபுரிந்துள்ளார். ’இதுதான் ஈழம்’, ’லங்காராணி’(புதினம்-ஆசிரியர்: அருளர் மாஸ்கோ லுமும்பா), போன்ற நூல்வெளியீட்டிலும் பெரும்பங்களிப்பு வழங்கியவர். தமிழ்மண் பதிப்பகம் பதிப்பித்த பல நூல்கள் வெளிவருவதற்குத் துணைநின்றவர். திருவள்ளுவர் அறக்கட்டளையில் இணைந்து பணிபுரிந்தவர்.

தமிழ்ப் பட்டதாரிகள் கழகம் என்ற அமைப்பின் செயலாளராகவும் பணிபுரிந்தவர். தமிழ் உரிமைக் கூட்டமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர். தமிழ் வழிக் கல்வி சார்ந்த அமைப்புகளில் பங்களிப்பு நல்கியவர். ஆறுபேர் கூட்டில் ஒப்புரவு அச்சகம் நிறுவி அச்சுப் பணியில் பலருக்கும் துணையாக இருந்தவர். ஈழப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனான தொடர்பும் இவருக்கு அமைந்தது; பெரும் பொருளிழப்புக்கு ஆளான இவர், பொருளியல் மீட்சி பெற, சிங்கப்பூருக்குச் சென்று, போதிய ஆதரவு இன்மையால் போன வேகத்தில் திரும்பிவந்தவர்(1987). தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் துணை இயக்குநராகவும், பின்னாளில் செம்மொழி நிறுவனத்திலும் பணிபுரிந்தவர். ந. அரணமுறுவல் அவர்கள் 06.11.2015 இல் தம் மகள் இல்லத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார்.

எளிய குடும்பத்தில் பிறந்த அரணமுறுவல் படிக்க வேண்டும் என்ற முனைப்புடையவராக விளங்கியுள்ளார். பொருள்நிலையைச் சரிசெய்யவேண்டிய தேவையும், குடும்பக்கடமைகளும், தமிழியக்க உணர்வும் இவர் வாழ்வில் பல்வேறு துன்பங்களைக் கொண்டு வந்து சேர்த்துள்ளன. அச்சுப்பணி, தமிழ்ப்பணி, இயக்கப்பணி என்று தம் வாழ்நாளைக் கழித்தவராக இவர்தம் பணிகள் நமக்கு நின்று நினைவூட்டுகின்றன. கழக இலக்கியங்களிலும், பிற தமிழ் இலக்கியங்களிலும் நல்ல பயிற்சியுடையவராக இருந்தாலும் படைப்பு நூல்களை இவர் வழங்கவில்லை. பேச்சாளராகவும், கருத்தாளராகவும் தமிழக மேடைகளில் திகழ்ந்த இவரின் வாழ்க்கை ஒரு தமிழியக்கமாக அமைந்திருந்தது. ந. அரணமுறுவலின் பேச்சு, இயக்கம், எழுத்து யாவும் முறைப்படத் தொகுக்கும்பணியில் ஈடுபட்டால் அரிய வரலாற்றுக்குறிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றுக்குக் கிடைக்கும்.

நன்றி: 
தமிழினச் செயற்பாட்டாளர் ந. அரணமுறுவல் முதலாண்டு நினைவு மலர்,
உலகத் தமிழ்க் கழகம், 288, மருத்துவர் நடேசன் சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை -600 005
பேசி: 0091 945207501

வியாழன், 22 ஜனவரி, 2015

பேராசிரியர் இரா. இளவரசு அவர்கள் மறைவு


 முனைவர் இரா. இளவரசு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் உயராய்வு மையத்தின் தலைவராக விளங்கியவரும், தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவரும், தமிழியக்கம் அமைப்பைக் கட்டிக் காத்தவர்களுள் ஒருவருமான பேராசிரியர் இரா. இளவரசு அவர்கள் இன்று 22. 01. 2015 முற்பகல் 11 மணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த இருபதாண்டுகளாகப் பேராசிரியருடன் கொள்கைவழிப்பட்ட தொடர்பினைக் கொண்டிருந்தேன். பேராசிரியர் அவர்களின் மாண்புயர் தலைமையில் திருமணம் செய்துகொண்டேன். தந்தை மகன் வழிப்பட்ட உறவில் என்னை அழைத்து மகிழும் அப்பெருமகனாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், கொள்கை வழிப்பட்ட சுற்றத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். 
பேராசிரியர் இரா. இளவரசு அவர்களின் உடல் நல்லடக்க ஊர்வலம் நாளை 23.01.2015. பிற்பகல் 3 மணிக்கு அவர்தம் சென்னை வேளச்சேரி இல்லத்திலிருந்து புறப்படும்.

பேராசிரியர் குறித்து நான் எழுதிய கட்டுரையை மீண்டும் தேவை கருதி வெளியிடுகின்றேன்.

பேராசிரியர் பணி என்பது வகுப்பறைக்குள் மட்டும் இல்லை. அது வெளிப் பகுதிகளிலும் செய்ய வேண்டியது என்பதை உணர்த்திய பேராசிரியர்கள் இருவருள் ஒருவர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் மற்றவர் முனைவர் இரா.இளவரசு அவர்கள்.இருவரும் இணைபிரியாக் கொள்கை நண்பர்கள் என்பது கூடுதல் செய்தி.தூய வளனார் கல்லூரிப் படிப்புப் பருவத்தில் முகிழ்த்த இருவரின் நட்பு 'உணர்ச்சிதாம் நட்பாம் கிழமைதரும்' என்னும் தமிழ்மறைக்குச் சான்றானது.

இருபெரும் பேராசிரியர்களும் தனித்தமிழ் உணர்வு மிக்கவர்கள்.பாவாணர் கொள்கையில் ஆழ்ந்த பற்றுடையவர்கள்.முன்னவர் சாத்தையா என்ற பெயரைத் தமிழ்க்குடிமகனாக்கி மதுரை யாதவர் கல்லூரியில் இருந்தபடி தமிழகத்தை வலம்வந்து தனித்தமிழ் உணர்வூட்டி யவர்கள். பின்னவர் பிச்சை என்ற பெயருடன் பிறந்து தமிழகத்தின் பல கல்லூரிகளில் பணியாற்றி இளவரசாக வாழ்பவர்கள்.தமிழியக்கம் கண்டவர்கள்.தமிழுக்காகக் களமிறங்கிப் போராடியவர்கள்.

தமிழைப் பயிற்றுவிக்கும் போர்வையில் தமிழுக்கு எதிரானவர்களாகவும்,தமிழ்ப்பற்று இல்லாதவர்களாகவும் இன்றைய தமிழ்ப்பேராசிரியர்கள் பலர் இருக்க இவர்களுக்கு இணையாக வேறொருவர் பெயரை ஒலிக்கமுடியாதபடி தனித்தமிழ்ப்பணியால் தன்னேரில்லாத புலவர் பெருமக்களாக இவ்விரு அறிஞர்களும் தமிழக வரலாற்று ஏடுகளில் என்றும் நின்று புகழ் ஒளி வீசுவார்கள்.இவ்விரு பேராசிரியர்களுள் முனைவர் இரா.இளவரசு அவர்களின் தனித்தமிழ் வாழ்க்கைப் போக்கினை இங்குப் பதிவதில் மகிழ்கிறேன்.

(முனைவர்பட்ட ஆய்வு மாணவனாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யான் ஆய்வுசெய்த பொழுது எனக்குப் பார்வைக்குக் கிடைத்து, அதன்பிறகு பல்வேறு தனித்தமிழ் அமைப்பு சார்ந்த கலந்துரையாடல்களில் எனக்கு அணுக்கமாகி,கொள்கைவழிப்பட்ட ஆசிரியராக மாறியவர் முனைவர் இரா.இளவரசு அவர்கள். இவர் என் திருமணத்தை முனைவர் தமிழண்ணல், கதிர்.தமிழ்வாணன்,முனைவர் க.ப.அறவாணன் ஆகிய சான்றோர்கள் முன்னிலையில் நடத்திப் பார்த்த பெருமகனார்.அவர்களின் தொடர்பு கொள்கைவழிப்பட்டது.அது பற்றிய பல செய்திகளை வேறொரு சூழலில் எழுதுவேன்)

முனைவர் இரா.இளவரசு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம் இராமநாதபுரம் ஊரில் 12.06.1939 இல் பிறந்தவர். பெற்றோர் மு.இராமசாமி, அருக்காணி அம்மாள். பூவாளூர், இலால்குடி, திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, திருவனந்தபுரத்தில் கல்வி பயின்றவர். புகுமுக வகுப்பில் இவர் கணிதம் பயின்று, இளங்கலையில் பொருளியல் பயின்று தமிழ் ஆர்வம் காரணமாக முதுகலையில் தமிழ் இலக்கியம் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் பயின்றவர். அறிஞர் வ. சுப .மாணிக்கனாரின் தமிழ்க் கொள்கைகளைத் தாங்கிய மாணவர் இவர்.

இவர் பேராசிரியர்களுள் இரா.இராதாகிருட்டிணன், வ.சுப.மாணிக்கம், வ.அய்.சுப்பிரமணியன் முதலியவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக் கழகத்தில் 'பெருங்கதையின் மொழியமைப்பு' என்னும் பொருளில் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றவர்.
திருச்சி காசாமியான் உயர்நிலைப்பள்ளி, கேரளப்பல்கலைகழகம், அழகப்பா கல்லூரியில் ஆசிரியப் பணியாற்றியதுடன் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கருவூர், சென்னையில் உள்ள தமிழக அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். தொண்டு நோக்கில் சென்னை இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க்கல்லூரி, திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி, காஞ்சி மணிமொழியார் தமிழ்க்கல்லூரிகளில் தமிழ் முதுகலை ஆசிரியராகவும், இ.ஆ.ப.தேர்வுகளுக்கு நடுவண் அரசு நடத்தும் போட்டித்தேர்வு எழுதும் நடுவங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்.
முனைவர் இரா.இளவரசு அவர்களின் மேற்பார்வையில் ஒன்பதுபேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.இருபது பேர் ஆய்வியல் நிறைஞர்பட்டம் பெற்றுள்ளனர்.
பேராசிரியர் பணியுடன் தமிழியக்க அமைப்புகள் பலவற்றில் இணைந்து பணிபுரிந்தவர். அவ்வகையில் உலகத் தமிழ்க்கழகம், தமிழியக்கம், உலகத்தமிழ்க்கல்வி, கலை, பண்பாட்டுக் கழகம்,தமிழக ஈழ நட்புறவுக்கழகம், தமிழ்வழிக்கல்வி இயக்கம்,தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து பணிபுரிந்தவர்.
உலகத்தமிழ் மாநாட்டு மலரிலும்,பல்வேறு பல்கலைக்கழகக் கருத்தரங்க மலர்களிலும் ஏடுகளிலும் சற்றொப்ப அறுபதிற்கும மேற்பட்ட கட்டுரைகளை வடித்துள்ளார். மதுரை, சென்னை, அண்ணாமலை, பாரதியார், புதுவைப் பல்கலைக்கழகங்களில் பல சொற்பொழிவுகள் வழங்கியுள்ளார்.

தமிழக அரசின் பரிசு, பாராட்டு, தலைநகர்த் தமிழ்ச்சங்கப் பாராட்டு, பாவேந்தர் பாசறைப் பாராட்டு, முருகாலயம் உள்ளிட்ட அமைப்புகளின் பாராட்டைப் பெற்றவர்.
தமிழக அரசின் பாவேந்தர் புகழ் பரப்புநர்(1991),பாவேந்தர் பைந்தமிழ்ச்செல்வர், (பாவேந்தர் பாசறை) உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவர்.தமிழக ஆளுநரால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் திட்டக்குழு உறுப்பினராக அமர்த்தப்பட்டவர். தில்லி சாகித்திய அகாதெமியின் பரிசுநூல் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இண்டுமுறை கடமையாற்றியவர். தனித்தமிழ், பகுத்தறிவு, பொதுமைநலக் கருத்துகளை முன்வைக்கும் தமிழியக்க அமைப்பின் பொதுச்செயலாளராகப்(1972)பணிபுரிந்தவர்.
பாவாணர் நூற்றாண்டு விழாவைத் தமிழகம் முழுவதும் நடத்த ஏற்பாடு செய்து பணியாற்றியதுடன் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் சென்று பாவாணர் கொள்கைகளை முழங்கியவர். இவரின் தனித்தமிழ்ப் பணிகளைப் பாராட்டி தினமணி,முகம்,இளந்தமிழன் உள்ளிட்ட இதழ்கள் புகழ்ந்து எழுதியுள்ளன.
முனைவர் இரா.இளவரசு அவர்கள் பாவேந்தர் பாடல்களிலும் பாவாணர் நூல்களிலும் நல்ல பயிற்சியுடையவர்.அதுபோல் தமிழ் இலக்கண இலக்கியங்களில், மொழியியலில் நல்ல ஈடுபாடு கொண்டவர்கள். ஆயிரக்கணக்கான மாணவர்களைத் தமிழ் உணர்வுடையவாராக மாற்றிக் காட்டியவர்.கடல்கடந்த நாடுகளிலும் இவர் தமிழ் உணர்வு அறியப்பட்ட ஒன்றாகும். தமிழுக்கு எதிரான கருத்துகளை உரைப்பவர்கள் யார் எனினும் எந்தப் பதவியில் இருப்பவர் எனினும் அஞ்சாமல் எதிர்க்கும் ஆற்றல் உடையவர்.

தமிழ் திராவிட இயக்க உணர்வுடன் வளர்ந்தவர்.பாவேந்தரின் வெளிவராத பாடல்களை வெளிக்கொண்டு வந்தது உட்பட இவர்தம் பாவேந்த ஆய்வுகள் குறிப்பிடத்தக்கனவாகும்.

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் உயராய்வு மையத்தில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் 1999- 2005 இல் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.சென்னையில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.

முனைவர் இரா.இளவரசு அவர்களின் துணைவியார் பேராசிரியர் வேலம்மாள் அவர்கள். இவர்களுக்கு அன்பு, ஓவியன் என இரு மக்கள் செல்வங்கள். இருவருக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து பார்த்தவர் நம் பேராசிரியர் அவர்கள்

முனைவர் இரா.இளவரசு அவர்கள் வழங்கிய தமிழ்க்கொடை

01.விடுதலை,1970
02.இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன்,1990
03.பாவேந்தரின் உலக நோக்கு,2002
04.நண்பகல் ஞாயிறு,2002
05.வரும்புயல் நாங்கள்,2002
06.நிறைந்த அன்புடன்(அணிந்துரைகள்),2002
07.அலைகள்,2002
08.பாரதிதாசன் பாடல்கள் முதற்குறிப்பு அகரவரிசை,2005
09.பாவேந்தர் பாரதிதாசனின் பழம்புதுப்பாடல்கள்,2005

இளவரசியம்(மணிவிழாமலர்),2003

முனைவர் இரா.இளவரசு அவர்களின் இல்ல முகவரி :


4, 11 ஆம் முதன்மைச்சாலை,
விசயநகர், வேளச்சேரி,
சென்னை-600 042
பேசி : 044 - 22430015

செல்பேசி: + 9840460547

வெள்ளி, 3 அக்டோபர், 2008

பேராசிரியர் இரா.இளவரசு(12.06.1939 - 23.01.2015 )


முனைவர் இரா.இளவரசு




பேராசிரியர் பணி என்பது வகுப்பறைக்குள் மட்டும் இல்லை. அது வெளிப் பகுதிகளிலும் செய்ய வேண்டியது என்பதை உணர்த்திய பேராசிரியர்கள் இருவருள் ஒருவர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் மற்றவர் முனைவர் இரா.இளவரசு அவர்கள்.இருவரும் இணைபிரியாக் கொள்கை நண்பர்கள் என்பது கூடுதல் செய்தி.தூய வளனார் கல்லூரிப் படிப்புப் பருவத்தில் முகிழ்த்த இருவரின் நட்பு 'உணர்ச்சிதாம் நட்பாம் கிழமைதரும்' என்னும் தமிழ்மறைக்குச் சான்றானது.

இருபெரும் பேராசிரியர்களும் தனித்தமிழ் உணர்வு மிக்கவர்கள்.பாவாணர் கொள்கையில் ஆழ்ந்த பற்றுடையவர்கள்.முன்னவர் சாத்தையா என்ற பெயரைத் தமிழ்க்குடிமகனாக்கி மதுரை யாதவர் கல்லூரியில் இருந்தபடி தமிழகத்தை வலம்வந்து தனித்தமிழ் உணர்வூட்டி யவர்கள். பின்னவர் பிச்சை என்ற பெயருடன் பிறந்து தமிழகத்தின் பல கல்லூரிகளில் பணியாற்றி இளவரசாக வாழ்பவர்கள்.தமிழியக்கம் கண்டவர்கள்.தமிழுக்காகக் களமிறங்கிப் போராடியவர்கள்.

தமிழைப் பயிற்றுவிக்கும் போர்வையில் தமிழுக்கு எதிரானவர்களாகவும்,தமிழ்ப்பற்று இல்லாதவர்களாகவும் இன்றைய தமிழ்ப்பேராசிரியர்கள் பலர் இருக்க இவர்களுக்கு இணையாக வேறொருவர் பெயரை ஒலிக்கமுடியாதபடி தனித்தமிழ்ப்பணியால் தன்னேரில்லாத புலவர் பெருமக்களாக இவ்விரு அறிஞர்களும் தமிழக வரலாற்று ஏடுகளில் என்றும் நின்று புகழ் ஒளி வீசுவார்கள்.இவ்விரு பேராசிரியர்களுள் முனைவர் இரா.இளவரசு அவர்களின் தனித்தமிழ் வாழ்க்கைப் போக்கினை இங்குப் பதிவதில் மகிழ்கிறேன்.

(முனைவர்பட்ட ஆய்வு மாணவனாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யான் ஆய்வுசெய்த பொழுது எனக்குப் பார்வைக்குக் கிடைத்து, அதன்பிறகு பல்வேறு தனித்தமிழ் அமைப்பு சார்ந்த கலந்துரையாடல்களில் எனக்கு அணுக்கமாகி,கொள்கைவழிப்பட்ட ஆசிரியராக மாறியவர் முனைவர் இரா.இளவரசு அவர்கள். இவர் என் திருமணத்தை முனைவர் தமிழண்ணல், கதிர்.தமிழ்வாணன்,முனைவர் க.ப.அறவாணன் ஆகிய சான்றோர்கள் முன்னிலையில் நடத்திப் பார்த்த பெருமகனார்.அவர்களின் தொடர்பு கொள்கைவழிப்பட்டது.அது பற்றிய பல செய்திகளை வேறொரு சூழலில் எழுதுவேன்)

முனைவர் இரா.இளவரசு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம் இராமநாதபுரம் ஊரில் 12.06.1939 இல் பிறந்தவர். பெற்றோர் மு.இராமசாமி, அருக்காணி அம்மாள். பூவாளூர், இலால்குடி, திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, திருவனந்தபுரத்தில் கல்வி பயின்றவர். புகுமுக வகுப்பில் இவர் கணிதம் பயின்று, இளங்கலையில் பொருளியல் பயின்று தமிழ் ஆர்வம் காரணமாக முதுகலையில் தமிழ் இலக்கியம் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் பயின்றவர். அறிஞர் வ. சுப .மாணிக்கனாரின் தமிழ்க் கொள்கைகளைத் தாங்கிய மாணவர் இவர்.

இவர் பேராசிரியர்களுள் இரா.இராதாகிருட்டிணன், வ.சுப.மாணிக்கம், வ.அய்.சுப்பிரமணியன் முதலியவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக் கழகத்தில் 'பெருங்கதையின் மொழியமைப்பு' என்னும் பொருளில் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றவர்.
திருச்சி காசாமியான் உயர்நிலைப்பள்ளி, கேரளப்பல்கலைகழகம், அழகப்பா கல்லூரியில் ஆசிரியப் பணியாற்றியதுடன் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கருவூர், சென்னையில் உள்ள தமிழக அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். தொண்டு நோக்கில் சென்னை இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க்கல்லூரி, திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி, காஞ்சி மணிமொழியார் தமிழ்க்கல்லூரிகளில் தமிழ் முதுகலை ஆசிரியராகவும், இ.ஆ.ப.தேர்வுகளுக்கு நடுவண் அரசு நடத்தும் போட்டித்தேர்வு எழுதும் நடுவங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்.
முனைவர் இரா.இளவரசு அவர்களின் மேற்பார்வையில் ஒன்பதுபேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.இருபது பேர் ஆய்வியல் நிறைஞர்பட்டம் பெற்றுள்ளனர்.
பேராசிரியர் பணியுடன் தமிழியக்க அமைப்புகள் பலவற்றில் இணைந்து பணிபுரிந்தவர். அவ்வகையில் உலகத் தமிழ்க்கழகம், தமிழியக்கம், உலகத்தமிழ்க்கல்வி, கலை, பண்பாட்டுக் கழகம்,தமிழக ஈழ நட்புறவுக்கழகம், தமிழ்வழிக்கல்வி இயக்கம்,தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து பணிபுரிந்தவர்.
உலகத்தமிழ் மாநாட்டு மலரிலும்,பல்வேறு பல்கலைக்கழகக் கருத்தரங்க மலர்களிலும் ஏடுகளிலும் சற்றொப்ப அறுபதிற்கும மேற்பட்ட கட்டுரைகளை வடித்துள்ளார். மதுரை, சென்னை, அண்ணாமலை, பாரதியார், புதுவைப் பல்கலைக்கழகங்களில் பல சொற்பொழிவுகள் வழங்கியுள்ளார்.

தமிழக அரசின் பரிசு, பாராட்டு, தலைநகர்த் தமிழ்ச்சங்கப் பாராட்டு, பாவேந்தர் பாசறைப் பாராட்டு, முருகாலயம் உள்ளிட்ட அமைப்புகளின் பாராட்டைப் பெற்றவர்.
தமிழக அரசின் பாவேந்தர் புகழ் பரப்புநர்(1991),பாவேந்தர் பைந்தமிழ்ச்செல்வர், (பாவேந்தர் பாசறை) உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவர்.தமிழக ஆளுநரால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் திட்டக்குழு உறுப்பினராக அமர்த்தப்பட்டவர். தில்லி சாகித்திய அகாதெமியின் பரிசுநூல் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இண்டுமுறை கடமையாற்றியவர். தனித்தமிழ், பகுத்தறிவு, பொதுமைநலக் கருத்துகளை முன்வைக்கும் தமிழியக்க அமைப்பின் பொதுச்செயலாளராகப்(1972)பணிபுரிந்தவர்.
பாவாணர் நூற்றாண்டு விழாவைத் தமிழகம் முழுவதும் நடத்த ஏற்பாடு செய்து பணியாற்றியதுடன் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் சென்று பாவாணர் கொள்கைகளை முழங்கியவர். இவரின் தனித்தமிழ்ப் பணிகளைப் பாராட்டி தினமணி,முகம்,இளந்தமிழன் உள்ளிட்ட இதழ்கள் புகழ்ந்து எழுதியுள்ளன.
முனைவர் இரா.இளவரசு அவர்கள் பாவேந்தர் பாடல்களிலும் பாவாணர் நூல்களிலும் நல்ல பயிற்சியுடையவர்.அதுபோல் தமிழ் இலக்கண இலக்கியங்களில், மொழியியலில் நல்ல ஈடுபாடு கொண்டவர்கள். ஆயிரக்கணக்கான மாணவர்களைத் தமிழ் உணர்வுடையவாராக மாற்றிக் காட்டியவர்.கடல்கடந்த நாடுகளிலும் இவர் தமிழ் உணர்வு அறியப்பட்ட ஒன்றாகும். தமிழுக்கு எதிரான கருத்துகளை உரைப்பவர்கள் யார் எனினும் எந்தப் பதவியில் இருப்பவர் எனினும் அஞ்சாமல் எதிர்க்கும் ஆற்றல் உடையவர்.

தமிழ் திராவிட இயக்க உணர்வுடன் வளர்ந்தவர்.பாவேந்தரின் வெளிவராத பாடல்களை வெளிக்கொண்டு வந்தது உட்பட இவர்தம் பாவேந்த ஆய்வுகள் குறிப்பிடத்தக்கனவாகும்.

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் உயராய்வு மையத்தில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் 1999- 2005 இல் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.சென்னையில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.

முனைவர் இரா.இளவரசு அவர்களின் துணைவியார் பேராசிரியர் வேலம்மாள் அவர்கள். இவர்களுக்கு அன்பு, ஓவியன் என இரு மக்கள் செல்வங்கள். இருவருக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து பார்த்தவர் நம் பேராசிரியர் அவர்கள்

முனைவர் இரா.இளவரசு அவர்கள் வழங்கிய தமிழ்க்கொடை

01.விடுதலை,1970
02.இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன்,1990
03.பாவேந்தரின் உலக நோக்கு,2002
04.நண்பகல் ஞாயிறு,2002
05.வரும்புயல் நாங்கள்,2002
06.நிறைந்த அன்புடன்(அணிந்துரைகள்),2002
07.அலைகள்,2002
08.பாரதிதாசன் பாடல்கள் முதற்குறிப்பு அகரவரிசை,2005
09.பாவேந்தர் பாரதிதாசனின் பழம்புதுப்பாடல்கள்,2005

இளவரசியம்(மணிவிழாமலர்),2003

முனைவர் இரா.இளவரசு அவர்களின் முகவரி :

முனைவர் இரா.இளவரசு,
4, 11 ஆம் முதன்மைச்சாலை,
விசயநகர், வேளச்சேரி,
சென்னை-600 042
பேசி : 044 - 22430015
செல்பேசி: + 9840460547


பாவேந்தர் ஆய்வுகளில் அரிய நூல்


பாவேந்தரின் உலக நோக்கை எடுத்துரைக்கும் நூல்


பேராசிரியரின் ஆய்வுக்கட்டுரைகள்


பேராசிரியரின் பாடல்கள் அடங்கிய நூல்


மணிவிழா மலர்