நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
கருத்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜூன், 2016

கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம்





  உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளை 2016 சூன் மாதம் 4, 5 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் தொல்காப்பியம் குறித்த கருத்தரங்கினை நடத்துகின்றது. கனடா நாட்டில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் (Ellesmere & Midland) இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியத்தில் எண்ணுப்பெயர்களும் அளவுப்பெயர்களும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் சிறப்புரை வழங்குகின்றார்.

  முதல் நாள் (04.06.2016) காலை 9 மணி முதல் 12 மணி வரை பேராசிரியர் சீதாஇலட்சுமி தலைமையில் செயல் அமர்வு நடைபெறுகின்றது. பொ.விவேகானந்தன், செல்வநாயகி சிறிதாஸ், இ. பாலசுந்தரம், பார்வதி கந்தசாமி, சபா. அருள் சுப்பிரமணியம், க. குமரகுரு, யோகரத்தினம் செல்லையா, லோகா இரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வுக் கட்டுரை வழங்குகின்றனர்.

  மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் செயல் அமர்வு முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் நடைபெறுகின்றது.

  சுகந்தன் வல்லிபுரம், த. சிவபாலு, மேரிபோல், பால. சிவகடாட்சம், ஜோசப் சந்திரகாந்தன், இ.பாலசுந்தரம் மருத்துவர் இலம்போதரன், கவிதா இராமநாதன், சாரதா குமாரசாமி ஆகியோர் தொல்காப்பியம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்குகின்றனர்.

  மங்கல விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசிய கீதம், தொல்காப்பியப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு, நாட்டியம், தொல்காப்பியர் வழி நாட்டாரிசை, சிறப்புரை, நூல்வெளியீடு, கவியரங்கம் எனப் பல நிகழ்வுகள் இரண்டு நாளும் நடைபெறுகின்றன. கவியரங்கில் பேராசிரியர் பா. பசுபதி தலைமையில்  புகாரி, சித்தி விநாயகம், தீவகம் வே. இராசலிங்கம், சபா. அருள் சுப்பிரமணியம் ஆகிய கவிஞர்கள் கவியரங்கேறுகின்றனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளைக் கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


  உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு 2015 செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. இதன் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தொடர்புக்கு: சிவ.பாலு அவர்கள்: 416 546 1394



வியாழன், 27 மார்ச், 2014

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அறக்கட்டளைக் கருத்தரங்கம்


முனைவர் எஸ். பத்மநாபன் உரை


தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அறக்கட்டளை சார்பில் இன்று (27.03.2014) பிற்பகல் 2 மணியளவில் சமூக மாற்றமும் இதழ்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஆய்வுக்களஞ்சியம் இதழாசிரியர் முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் வரலாற்று இதழ்கள் என்ற தலைப்பிலும், முனைவர் மு.இளங்கோவன் மின் இதழ்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் ம. திருமலை அவர்களும், பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தமிழ் இலக்கியத் துறைத்தலைவர் முனைவர் க. திலகவதி அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினார்.

துணைவேந்தர் முனைவர் ம. திருமலை அவர்கள்


பேராசிரியர் க. திலகவதி வரவேற்புரை

வியாழன், 22 ஜனவரி, 2009

முதலாவது பன்னாட்டுச் செவ்வியல்மொழி மாநாடு-கருத்தரங்கம்

திருச்செங்கோடு கே.எசு.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வரும் 2009 ஏப்பிரல் மாதம்25,26 இருநாள் நடைபெற உள்ளது.கருத்தரங்கின் மையப்பொருள் செவ்வியல் - மொழிகள், இலக்கணங்கள், இலக்கியங்கள் என்பதாகும்.கருத்தரங்கில் படிக்கத் தக்க கட்டுரையைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஐந்து முதல் பத்துப் பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சில் அனுப்பவேண்டும்.

பதிவுக்கட்டணம் பேராசிரியர்கள் 300-00 உருவா.ஆய்வுமாணவர்கள் 200-00 உருவா.

THE PRINCIPAL,K.S.R.COLLEGE OF ARTS AND SCIENCE,TIRUCHENGODE என்ற பெயருக்கு வரைவோலை அமைதல்வேண்டும்

பங்கேற்பாளர்கள் 25.02.2009 நாளுக்குள் பணம்,கட்டுரை அனுப்பிவைக்கவேண்டும்.

தொடர்பு முகவரி:

முனைவர் இரா.சந்திரசேகரன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
கே.எசு.ஆர்.கலை,அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு-637215
தமிழிநாடு,இந்தியா

என்னும் முகவரியில் தொடர்புகொள்ளலாம்

செல்பேசி :+91 9443551701
மின்னஞ்சல் : tamilchandru@yahoo.com

மேலும் விவரங்களுக்கு,அழைப்பிதழுக்குக் கல்லூரியின் வலைப்பூவைக் காண்க!